நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், கல்விநிறுவனங்களுக்கும்
பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) ஒருஅதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர்
ஜே.எஸ்.சந்து,அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி உள்ள
உத்தரவில்,‘‘பட்டப்படிப்பு சான்றிதழ்களிலும், மதிப்பெண்
சான்றிதழ்களிலும்மாணவ, மாணவியரின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும்இடம்
பெறச்செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும்
‘‘மாணவ, மாணவியர் படித்த கல்வி நிறுவனத்தின் பெயரையும்சான்றிதழ்களில்
வெளியிடவேண்டும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சான்றிதழ்களில் இப்படி
பாதுகாப்பு அடையாள அம்சங்களைஏற்படுத்துவது போலிகளை தடுக்கவும், பரிசோதனையை
எளிதாக்கவும்உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக
மானியக்குழுவின் கூட்டத்தில்இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...