''பிளஸ் 2வில்
கணக்கு, வணிக கணக்கு பாடத்தில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு,
மேற்படிப்புடன் கூடிய வேலை வழங்க 'டெக் பீ' என்ற, திட்டத்தை
ஆரம்பித்துள்ளோம்'' என, எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவன துணைத் தலைவர்
ஸ்ரீமதி, மதுரை தலைவர் சுப்புராமன் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தில், மதுரையில் மட்டும் 1000 பேருக்கு வேலை அளித்துள்ளோம். வெளிநாடுகளில் பல நிறுவனங்கள் மாணவர்களுக்கு, வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதே போல் இங்கும் ஒரு திட்டம் இருந்தால் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று நினைத்தோம். அதற்காகவே, பிளஸ் 2வில் கணக்கு, வணிக கணக்கு பாடங்களில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மேற்படிப்புடன் கூடிய வேலை வழங்க 'டெக் பீ' என்ற, திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். நுழைவு, நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். பின், மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மேற்படிப்புடன், வேலை வழங்கப்படும்.
படிப்பிற்கான கட்டணத்தை மாணவர்கள்,
தங்கள் சம்பளத்தில் இருந்து மாத தவணையில் செலுத்த வேண்டும்.
வேலைவாய்ப்பு குறித்து மாநகராட்சி, அரசுப் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று
விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம், என்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தில், மதுரையில் மட்டும் 1000 பேருக்கு வேலை அளித்துள்ளோம். வெளிநாடுகளில் பல நிறுவனங்கள் மாணவர்களுக்கு, வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதே போல் இங்கும் ஒரு திட்டம் இருந்தால் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று நினைத்தோம். அதற்காகவே, பிளஸ் 2வில் கணக்கு, வணிக கணக்கு பாடங்களில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மேற்படிப்புடன் கூடிய வேலை வழங்க 'டெக் பீ' என்ற, திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். நுழைவு, நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். பின், மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மேற்படிப்புடன், வேலை வழங்கப்படும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...