அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு வலியுறுத்தல்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு
முயற்சி எடுக்க வேண்டும் என ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு
வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்
சங்கங்கள் இணைந்த ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் தலைவர் ஜெ.கணேசன்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கான நிவாரணத்தை தமிழகஅரசு அறிவித்துள்ளது. அரசின் நடவடிக்கைகளில் இணையும் வகையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவெடுத்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்படவில்லை.இதுதவிர, மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை வழங்கும் வகையில், மாநில அரசின் 8-வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும். அதுவரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரும் வகையில், அதற்கான வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதன்பின், தமிழக அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த குழு அமைத்தது. அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக சாந்தா ஷீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும் இதுவரை அறிக்கை வழங்கவில்லை. அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து பேசி 7 மாதங்கள் கடந்துவிட்டது. அறிக்கையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக அமையுமோ என்ற சந்தேகம் உள்ளது. அவ்வாறாக வந்தால், முன்னாள் முதல்வரின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகவே அமையும்.மேலும், பல்வேறு கோரிக்கை கள் தொடர்பாக, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பில் உள்ள சில அமைப்புகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த அமைப்புகளின் கோரிக்கை யும் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளும் வெவ் வேறானவை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல், கூட்டமைப் பின் நிர்வாகிகளை அழைத்து பேசி, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கான நிவாரணத்தை தமிழகஅரசு அறிவித்துள்ளது. அரசின் நடவடிக்கைகளில் இணையும் வகையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவெடுத்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்படவில்லை.இதுதவிர, மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை வழங்கும் வகையில், மாநில அரசின் 8-வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும். அதுவரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரும் வகையில், அதற்கான வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதன்பின், தமிழக அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த குழு அமைத்தது. அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக சாந்தா ஷீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும் இதுவரை அறிக்கை வழங்கவில்லை. அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து பேசி 7 மாதங்கள் கடந்துவிட்டது. அறிக்கையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக அமையுமோ என்ற சந்தேகம் உள்ளது. அவ்வாறாக வந்தால், முன்னாள் முதல்வரின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகவே அமையும்.மேலும், பல்வேறு கோரிக்கை கள் தொடர்பாக, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பில் உள்ள சில அமைப்புகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த அமைப்புகளின் கோரிக்கை யும் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளும் வெவ் வேறானவை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல், கூட்டமைப் பின் நிர்வாகிகளை அழைத்து பேசி, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...