என் அன்புசால் கல்விக்குரல் ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெரும் ஆசிரியர் தோழமைகளுக்கு இனிய காலை வணக்கம்.இன்னும் தேர்விற்கு மூன்று தினங்களே உள்ளன.முதலில் தன்னம்பிக்கையும் ,விடாமுயற்ச்சியும் அவசியம்.நம் அனைவரும் 80 நாட்கள் பயிற்சி பெற்றுள்ளோம்.24 மாதிரி தேர்வுகள் எழுதியுள்ளோம்.அனைத்து பாடங்களையும் படித்துள்ளோம்.என்ற நம்பிக்கையுடன் படிப்போம்.இந்த மூன்று நாட்களில் கண்டிப்பாக தினம் தோறும் 15 மணி நேரம் தொடர்ச்சியாக படுயுங்கள்.படித்ததை நினைவு படுத்துங்கள். நம்முடைய புத்தகம்அனைத்தையும் நன்றாக படியுங்கள் தேர்வுகள் அனைத்தையும் திரும்ப திரும்ப நினைவு படுத்துங்கள்.உடல் நிலையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக நீங்கள் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள்.நிச்சயம் இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.நம்முடைய கடைசி தேர்வினை நாளை காலை 10மணிமுதல் 01மணிவரை எழுதுங்கள்,அதற்கான விடைகுறிப்பினை நாளை காலை 10 மணிக்கு உங்களுக்கு அனுப்பப்படும்.வெற்றி நமதே..கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
”இந்த நொடியில் உங்களது 100 சதவிகிதத்தையும் கொடுத்து உழைப்பது, அடுத்த நொடியின் வெற்றியையும் சந்தோஷத்தையும் உறுதி செய்துவிடுகிறது.”
”விடாமுயற்சியுடனும் தைரியத்துடனும் கனவுகளைத் துரத்திக்கொண்டு ஓட முடிவெடுத்தவரின் ஒவ்வொரு கனவும் நனவாகும்”
ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை
இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய
முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால்
இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.
வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
வாழ்த்துக்கள் ....என்றும் உங்கள் நலனில்-KALVIKURAL TEAM
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...