ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: வேலூர், கிருஷ்ணகிரியில் நாளை கலந்தாய்வு நடைபெறும்.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு இதுவரை 22 மாவட்டங்களில் கலந்தாய்வு
நிறைவு பெற்றுள்ள நிலையில் திருவள்ளூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு
செவ்வாய்க்கிழமையும் (ஏப்.18), வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில்
புதன்கிழமையும் (ஏப்.19) கலந்தாய்வு நடைபெறும்.
4,362 காலியிடங்களை நிரப்ப... அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது.140 பேர் வரவில்லை: இதையடுத்து எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில் பெற்ற மதிப்பெண் கூட்டுத்தொகை அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 22 மாவட்டங்களில் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு 2,558 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 2,418 பேர் பங்கேற்றனர். வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றது உள்ளிட்ட சில காரணங்களால் 140 பேர் வரவில்லை.
இதையடுத்து கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவள்ளூர், விருதுநகர், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெறும்.
வேலூர், கிருஷ்ணகிரி...மாவட்டங்களில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும். அதையடுத்து இரு மாவட்டங்களைச் சேர்ந்த கலந்தாய்வு புதன்கிழமை (ஏப்.19) நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4,362 காலியிடங்களை நிரப்ப... அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது.140 பேர் வரவில்லை: இதையடுத்து எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில் பெற்ற மதிப்பெண் கூட்டுத்தொகை அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 22 மாவட்டங்களில் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு 2,558 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 2,418 பேர் பங்கேற்றனர். வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றது உள்ளிட்ட சில காரணங்களால் 140 பேர் வரவில்லை.
இதையடுத்து கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவள்ளூர், விருதுநகர், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெறும்.
வேலூர், கிருஷ்ணகிரி...மாவட்டங்களில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும். அதையடுத்து இரு மாவட்டங்களைச் சேர்ந்த கலந்தாய்வு புதன்கிழமை (ஏப்.19) நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...