ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 2 நாட்கள்
நடைபெறும் தேர் வில் தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் கலந்து
கொள்கிறார்கள்.மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படிஒன்று
முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணி
யாற்ற வேண்டுமானால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றி ருக்க
வேண்டும்.
கேந்திரிய வித் யாலயா பள்ளிகள் உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் பணிபுரிய
சிபிஎஸ்சி நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்புஆசிரியர்
தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசிரி யர் தேர்வு வாரியம்
நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற் றால்தான் தமிழகத்தில் உள்ள அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்
பணியில் சேரலாம்.கடைசியாக கடந்த
2014-ம் ஆண்டு தகுதித்தேர்வு (மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு
தகுதித்தேர்வு) நடத்தப்பட்ட நிலை யில், 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு
தகுதித்தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. ஏற்கெனவே ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவித்தபடி ஏப்ரல் 29-ம் தேதி (சனிக்கிழமை) இடை நிலை
ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் (தாள்-1) மறுநாள் 30-ம் தேதி
(ஞாயிற்றுக்கிழமை) பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் (தாள்-2)
நடைபெற உள்ளன. முதல் நாளன்று 598 மையங்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 293
பேரும், 2-வது நாளில் 1,263 மையங்களில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேரும்
தேர் வெழுதுகிறார்கள்.
இரு நாட் களுக்கு நடைபெறும் தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் கலந்துகொள்வதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதி காரிகள் தெரிவித்தனர்.சென்னையில் தாள்-1 தேர்வை 27 மையங்களில் 10 ஆயிரத்து 147 பேரும், தாள்-2 தேர்வை 88 மையங்களில் 31 ஆயிரத்து 235 பேரும் எழுதுவதாக மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என்று போதிலும் தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு வந்துவிடுமாறு விண் ணப்பதாரர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை விண்ணப் பதாரர்கள் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர் களிடம் ஏதேனும் பிட் பேப்பர் இருக்கிறதா, கால்குலேட்டர், செல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உள்ளனவா என்ப தெல்லாம்பரிசோதனையின்போது ஆய்வு செய்யப்படும். பரிசோதனை முடிவடைந்த பின்னரே அவர்கள் தேர்வுக் கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும். தேர்வு அறையை விட்டு வெளியே வரும்போது விண்ணப்பதாரர்கள் விடைத்தாளின் நகலை (ஓஎம்ஆர் ஷீட் பிரதி) எடுத்துச்செல்லலாம். தகுதித்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாட் களுக்கு நடைபெறும் தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் கலந்துகொள்வதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதி காரிகள் தெரிவித்தனர்.சென்னையில் தாள்-1 தேர்வை 27 மையங்களில் 10 ஆயிரத்து 147 பேரும், தாள்-2 தேர்வை 88 மையங்களில் 31 ஆயிரத்து 235 பேரும் எழுதுவதாக மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என்று போதிலும் தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு வந்துவிடுமாறு விண் ணப்பதாரர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை விண்ணப் பதாரர்கள் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர் களிடம் ஏதேனும் பிட் பேப்பர் இருக்கிறதா, கால்குலேட்டர், செல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உள்ளனவா என்ப தெல்லாம்பரிசோதனையின்போது ஆய்வு செய்யப்படும். பரிசோதனை முடிவடைந்த பின்னரே அவர்கள் தேர்வுக் கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும். தேர்வு அறையை விட்டு வெளியே வரும்போது விண்ணப்பதாரர்கள் விடைத்தாளின் நகலை (ஓஎம்ஆர் ஷீட் பிரதி) எடுத்துச்செல்லலாம். தகுதித்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...