ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, இன்று நடக்கிறது. 'காப்பியடித்தல்,
ஆள்மாறாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டால், மூன்று தேர்வுகளில் பங்கேற்க தடை
விதிக்கப்படும்' என,எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்,
'டெட்' தேர்வுக்கு,7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஐந்தாம்
வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான, முதல் தாள் தேர்வை, 598 மையங்களில்,
2.37 லட்சம் பேர் எழுதுகின்றனர். நாளை, 10ம் வகுப்பு வரையிலான
ஆசிரியர்களுக்கு, இரண்டாம் தாள் தேர்வு, 1,561 மையங்களில் நடக்கிறது.
இதில், 5.03 லட்சம் பேர்
பங்கேற்கின்றனர். தேர்வில் காப்பியடிப்பதை
தடுக்க, 3,000 ஆசிரியர்கள் இடம் பெற்ற, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது;
18 ஆயிரம் ஆசிரியர்கள், கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
காலை, 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, 8:30 மணிக்கே
தேர்வர்கள், தேர்வு அறைக்கு வந்து விட வேண்டும். காலை, 9:00 மணிக்கு மேல்
வருவோருக்கு அனுமதி கிடையாது. காப்பியடித்தல், மற்றவர்களிடம் கேட்டு
எழுதுதல், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேட்டில் ஈடுபடக் கூடாது. மீறுவோருக்கு,
மூன்று, 'டெட்' தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு
உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...