அண்ணா பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை, சென்னை
பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி ஆகியோரை கவர்னர் நியமனம் செய்துள்ளார்.
இருவரும் இன்று பதவியேற்றனர். ஆனால், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு
துணைவேந்தர் நியமனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களை கவர்னர்
நிராகரித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்தது.
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க மோகன், எபினேசர் ஜெயக்குமார், கருணா மூர்த்தி ஆகிய 3 பேர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவர்களிடம் கவர்னர் நேற்று நேர்காணல் நடத்தினார். ஆனால் கவர்னர் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களிடம் அதற்கான தகுதி இல்லை எனக் கருதி அந்த 3 பேரையும் தேர்வு செய்யாமல் விட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு அமைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...