குழந்தையின் கற்றல் திறனை அதிகரிக்கும் ‘அப்பாவின் அக்கறை:
லண்டன் இம்பீரியல் கல்லூரி, கிங்ஸ்
கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த குழு,
இந்தக் கண்டுபிடிப்புகள் ஆரம்பகால தந்தை உறவின் மகத்துவத்தை
வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது.இந்த ஆய்வுக்காக, தரையில் பாய் விரிக்கப்பட்டு, அதன் மீது அப்பாக்கள்
தங்களுடைய மூன்று மாதக் குழந்தைகளுடன் பொம்மைகளின்றி விளையாட
வைக்கப்பட்டனர். அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அதன் பின்,
குழந்தைக்கு 2 வயதான சமயத்தில், ஓர் புத்தக வாசிப்பு அமர்வின்போது மீண்டும்
குழந்தைகளுடன் அப்பாக்கள் விளையாட வைக்கப்பட்டனர்.
இந்த இரு தருணங்களிலும் எடுக்கப்பட்ட வீடியோக்கள், தனிப் பயிற்சி பெற்ற ஆய்வாளர்களால் சுயமாக மதிப்பீடு செய்யப்பட்டன. மொத்தம் 128 தந்தைகள், அவர்களது குழந்தைகளின் தகவல்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆண் அல்லது பெண் எந்தக் குழந்தையாக இருந்தாலும் சரி, அப்பாக்கள் நெருக்கமாக இருந்த குழந்தைகள் பல்வேறு திறன் சோதனைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தன. அதிகம் விலகியிருந்த அல்லது மன அழுத்தத்தை வெளிக்காட்டிய அப்பாக்களின் குழந்தைகள், குறைவான மதிப்பீட்டைப் பெற்றிருந்தன.
குழந்தை மன நல இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, ‘விலகியிருக்கும் அப்பாக்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுடன் தொடர்புகொள்ள குறைந்தளவிலான சொற்களை அல்லது சொற்களற்ற உத்திகளைப் பயன்படுத்தினார்கள். இது சமூகத்திலிருந்து குழந்தை கற்றுக்கொள்ளும் அனுபவத்தைக் குறைக்கிறது. அவர்களின் அறிவாற்றல் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று கூறுகிறது.
இந்த இரு தருணங்களிலும் எடுக்கப்பட்ட வீடியோக்கள், தனிப் பயிற்சி பெற்ற ஆய்வாளர்களால் சுயமாக மதிப்பீடு செய்யப்பட்டன. மொத்தம் 128 தந்தைகள், அவர்களது குழந்தைகளின் தகவல்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆண் அல்லது பெண் எந்தக் குழந்தையாக இருந்தாலும் சரி, அப்பாக்கள் நெருக்கமாக இருந்த குழந்தைகள் பல்வேறு திறன் சோதனைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தன. அதிகம் விலகியிருந்த அல்லது மன அழுத்தத்தை வெளிக்காட்டிய அப்பாக்களின் குழந்தைகள், குறைவான மதிப்பீட்டைப் பெற்றிருந்தன.
குழந்தை மன நல இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, ‘விலகியிருக்கும் அப்பாக்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுடன் தொடர்புகொள்ள குறைந்தளவிலான சொற்களை அல்லது சொற்களற்ற உத்திகளைப் பயன்படுத்தினார்கள். இது சமூகத்திலிருந்து குழந்தை கற்றுக்கொள்ளும் அனுபவத்தைக் குறைக்கிறது. அவர்களின் அறிவாற்றல் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று கூறுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...