இ .நி .ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியக் கனவு நிறைவேற ஒரே தீர்வு
ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய நாளிலிருந்து 2800 தர
ஊதியத்தை 4200 ஆக மாற்றி அதனை தற்பொழுது வரை கருத்தியலாக கணக்கிட்டு, பிறகு
7வது ஊதியக் குழு பரிந்துரைக்கும் ஊதியத்தில் நிர்ணயம் செய்தலே சிறந்த
தீர்வு.
75 % சதவிகித ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு.
இதனை நோக்கியே அனைத்து சங்கங்களையும் பயணிக்க வைப்போம்.
அறிவித்த பிறகு எதுவும் செய்ய முடியாது.
அறிவித்த பிறகு எதுவும் செய்ய முடியாது.
அரசின் கஜானா காலி என்ற காரணத்திற்கும் இம் முடிவு நிச்சயம் தீர்வாக அமையும்.
நாம் தற்பொழுது பெற்று வரும் ஊதியத்திற்கு 2.62
முறையில் கணக்கிட்டால் - 7 வது ஊதியக் குழுவில் மத்திய அரசுக்கு இணையான
ஊதியம் என்றாகி விடும். இதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?
6 வது ஊதியக் குழுவில் திருத்தம் செய்து மத்திய
அரசுக்கு இணையான ஊதியம் பெற்ற பிறகு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்தலே
இ.நி.ஆசிரியர்களின் ஊதியம் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்திற்கு சமமாகும்.
ஜுன் 5 க்குள் ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் ஊதிய
நிர்ணய கோரிக்கைகளை அரசு கேட்டுள்ளது. ஜுன் 30க்குள் அரசு புதிய ஊதியக்
குழு விற்கு இறுதி வடிவம் கொடுத்து விட முடிவாற்றியுள்ளது. அதற்குள்
இக்கோரிக்கை அனைத்து ஆசிரியர் சங்கங்களின் உறுதி வடிவமாக்கி அரசுக்கு
அனுப்பி வைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். இறுதி வெற்றி நமதாக
இருக்கட்டும்...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...