பள்ளி மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல்
அந்தத்துறையில் அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு
வருகிறார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய
செங்கோட்டையன் பல புதிய அறிவிப்புகளைக் கூறினார்.அதாவது, பள்ளி
மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என
அவர் கூறினார்.
போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள 54,000 கேள்வி தொகுப்பு 15
நாட்களில் வெளியாகும் எனஅவர் கூறியுள்ளார்.பாட திட்டங்களை மாற்ற 3 நாட்கள்
கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.
பல்வேறு கல்வி நிபுணர்கள், அறிஞர்கள் இதில்பங்கேற்பார்கள் என்றும்
செங்கோட்டையன் தெரிவித்தார்.எந்த ஒரு பொதுத் தேர்வையும் எதிர்கொள்ள
மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக மாணவர்கள், எந்த போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் மாற்றிக்
காட்டுவோம் என்றும் செங்கோட்டையன் கூறினார்.9,10,11,12ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மாணவர்களுக்கு கணினியுடன் வைபை வசதியை செய்து தரவும்நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருவதாகவும் செங்கோட்டையன்கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...