மாணவர்கள் எண்ணிக்கை சரிவு ஏன்? சட்டசபையில்சூடான விவாதம் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Wednesday 19 July 2017

மாணவர்கள் எண்ணிக்கை சரிவு ஏன்? சட்டசபையில்சூடான விவாதம்

''ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது ஏன்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., அரசு எழுப்பிய கேள்வி தொடர்பாக, சட்டசபையில் கடும் விவாதம் நடந்தது.சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - அரசு: தி.மு.க., ஆட்சியில், 2010 - 11ல், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள், 1,073 செயல்பட்டன.இதில், 2.10 லட்சம் மாணவர்கள் படித்தனர். 296 உண்டி, உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டன. இவற்றில், 40 ஆயிரத்து, 608 மாணவர்கள் படித்தனர். ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது. தற்போது, 1,134 பள்ளிகளில், 1.06 லட்சம் மாணவர்களும், 314 உண்டி உறைவிடப் பள்ளிகளில், 27 ஆயிரத்து, 652 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.


இவ்விபரம் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கேற்ப, அரசு செயல்படாததற்கு, இது ஒன்றே போதும்.

கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: அரசு வழங்கிய பல்வேறு சலுகைகள் காரணமாக, ஆதிதிராவிட மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து உள்ளது. அவர்கள் நகரங்களில் குடியேறி உள்ளனர். அவர்களின் குழந்தைகள், அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதனால், ஆதிதிராவிடப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதை உறுப்பினர் வரவேற்க வேண்டும்.

அரசு: கல்வி கற்றுத்தராமல், ஆடு, மாடு வழங்குகிறீர்கள்.அமைச்சர் தங்கமணி: அந்த திட்டத்தை எதிர்க்கிறீர்களா; ஆதரிக்கிறீர்களா...அமைச்சர் ராஜலட்சுமி: ஜெ., ஆட்சியில், நிறைய பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துஉள்ளது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: மாணவர் எண்ணிக்கை ஏன் குறைந்தது என, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அளித்த பதிலுக்கு, அமைச்சர் ராஜலட்சுமி சரியான பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் தங்கமணி: ஆதிதிராவிட மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதால், ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். அரசு பள்ளிகள் அதிகம் துவக்கப்பட்டதால், மாணவர்கள் அங்கு அதிகம் சேர்ந்ததால், அரசு ஆதிதிராவிட பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என, அமைச்சர் ராஜலட்சுமி கூறுகிறார். இதில் நீங்கள் குறை காண வேண்டாம்.

அமைச்சர் செங்கோட்டையன்: குடும்ப கட்டுப்பாடு காரணமாக, குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது.இதுவும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு காரணம்.துரைமுருகன்: இது உங்கள் கருத்தாக இருக்க முடியாது; யாரிடமிருந்தோ இறக்குமதியாகி உள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H