நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு: தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆதரவு
புதுடெல்லி:
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவு தேர்வில் (நீட்) தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க கோரி அவசர சட்ட முன்வடிவை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த சட்ட முன்வடிவு தொடர்பாக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலிடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது.
இன்று பிற்பகல் கிடைத்த தகவல்களின்படி தமிழக அரசின் சட்ட முன்வரைவை ஆதரித்து மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கே.கே.வேணுகோபால் குறிப்பு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று மாலை அல்லது நாளைக்குள் நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும். இந்த முடிவு தமிழக அரசு கோரிக்கைக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அவசர சட்டத்தை அனுப்பி வைக்கும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் தமிழக மாணவ-மாணவிகளுக்கு கல்வியாண்டு 2017-2018-ல் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவு தேர்வில் (நீட்) தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க கோரி அவசர சட்ட முன்வடிவை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த சட்ட முன்வடிவு தொடர்பாக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலிடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது.
இன்று பிற்பகல் கிடைத்த தகவல்களின்படி தமிழக அரசின் சட்ட முன்வரைவை ஆதரித்து மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கே.கே.வேணுகோபால் குறிப்பு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று மாலை அல்லது நாளைக்குள் நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும். இந்த முடிவு தமிழக அரசு கோரிக்கைக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அவசர சட்டத்தை அனுப்பி வைக்கும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் தமிழக மாணவ-மாணவிகளுக்கு கல்வியாண்டு 2017-2018-ல் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...