எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கைவிடுத்தார்.
பள்ளிக் கல்வித் துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான பணி
நியமன உத்தரவுகள் வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில், ஓ.பன்னீர்செல்வம் பேசியது:பள்ளிக் கல்வித் துறைக்கு ஜெயலலிதாவின்
ஆட்சிதான் பொற்காலம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களிடம் கல்வி
உபகரணங்கள் ஏதும் இல்லை என்ற நிலை உருவாகி விடக்கூடாது என்பதற்காக அவை
விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், சீருடை, சைக்கிள், காலணி, லேப்-டாப் என அனைத்தையும் வழங்கி பள்ளி
இடைநிற்றல் இருக்கக் கூடாது என்பதற்காகபல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மிக உயர்ந்த பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு துறை
அறிஞர்களையும், எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளையும் உருவாக்கி
வருகிறார்கள் என்று துணை முதல்வர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...