சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், வருகிற மார்ச் மாதம் நடக்கும் 10 மற்றும்
12–ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்று
சி.பி.எஸ்.இ. நேற்று அறிவித்தது.
தற்போது, கிரேட் முறை பின்பற்றப்படும் நிலையில், இந்த
மாற்றம் செய்யப்படுகிறது.மேலும், 10–ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம்
ஆவதாகவும் சி.பி.எஸ்.இ. மீண்டும் தெரிவித்துள்ளது.10–ம் வகுப்புக்கு
கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் (தொடர்பு), ஆங்கிலம் (மொழி
மற்றும் இலக்கியம்) ஆகிய பாடங்களுக்கும், 12–ம் வகுப்பு தேர்வில் கணக்கு
பதிவியல், உயிரியல், வணிக கல்வி, வேதியியல், பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி,
கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களுக்கும் மதிப்பெண் முறை பின்பற்றப்படும்
என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
மதிப்பெண் முறையை இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம் என்றும், தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...