உத்தரகாண்ட்
மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பில்
சேர்வதற்கு (ஆண்கள் மட்டும்) வருகிற 31-3-2018க்குள் விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 1-1-2019 அன்று 11½ வயதுக்கு
குறையாமலும் 13 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். அதாவது
2-1-2006க்கு முன்னரும் 1-7-2007க்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது.
மாணவர்கள் 1-1-2019ல் இக்கல்லூரியில் சேரும்போது 7-ம் வகுப்பு படிப்பவராக
அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
1-6-2018 அன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை ஆங்கில தேர்வும், அன்று பிற்பகல் 2 மணிமுதல் 3-30 மணி வரை கணித தேர்வும் நடைபெறும். 2-6-2018 அன்று காலை 10 மணிமுதல் 11 மணிவரை பொது அறிவு தேர்வு நடைபெறும். (மேற்கண்ட கணிதம் மற்றும் பொது அறிவு தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். எழுத்து தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு 4-10-2018 அன்று நடைபெறும். புதுச்சேரி மாணவர்களுக்கு தேர்வு மையம் குறித்த தகவல் இணை இயக்குனர் அலுவலக தேர்வு பிரிவால் அஞ்சல் வழி மூலம் அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது www.ri-mc.gov.in என்ற வலைதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை புதுவை அண்ணா நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்துக்கு வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மேற்கண்ட தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...