புதிதாகத் தொடங்கப்படவுள்ள பாடத்திட்டங்களினால், பிளஸ்2
முடித்தவுடன்மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலைமை உண்டாகும் எனத்
தெரிவித்துள்ளார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன், இன்று (பிப்ரவரி 17) ஈரோடு மற்றும் திருப்பூரில் நடந்த
சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திருப்பூரில் உள்ள பள்ளியொன்றில்
அமைக்கப்பட்ட ஆய்வகத்தை, அவர் இன்று திறந்துவைத்தார். அங்கு பயிலும்
மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதோடு, அப்பள்ளி நூலகத்திற்காக
புத்தகங்களையும் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய
செங்கோட்டையன்,இன்னும் நான்கு மாதத்தில் தமிழகக் கல்வித்துறையில் மாற்றம்
உண்டாகும் என்று தெரிவித்தார்.”உலகத் தரத்தில் தமிழகப் பாடத்திட்டம் மாற்றி
அமைக்கப்படவுள்ளது.
சீருடைகளும் மாறவுள்ளது. அதன்பின், தனியார் பள்ளி மாணவர்களும்
அரசுப்பள்ளிகளில் தேடி வந்து சேரும் நிலை உண்டாகும்” என்றார்.இந்த
நிகழ்வுக்குப் பிறகு, ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்
செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது, பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பள்ளி
மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப் லைன்
திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், புதிதாக
அறிமுகப்படுத்தப்படவுள்ள பாடத்திட்டங்களினால், பிளஸ்2 முடித்தவுடன்
வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலைமை உண்டாகும் எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழக பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம் செய்து, புதிதாக 72 பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார் செங்கோட்டையன்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...