திருநெல்வேலி,நெல்லை
மாவட்டம், பாலாமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சூரிய ஒளி
மின்சாரம் மூலம் செயல்படும், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில், பல்வேறு அரசு தொடக்க, நடுநிலை பள்ளி களில், கம்ப்யூட்டர் வசதியுடன், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 5ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு செய்முறை விளக்கத்துடன் சமச்சீர் கல்வி பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது.இந்நிலையில், மானுார் ஒன்றியம், பாலாமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், செல்கோ இந்தியா நிறுவனத்தின் சார்பில், சூரியஒளி மின்சாரம் மூலம், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டது. வகுப்பறையில், கரும்பலகை மீது,40 அங்குல, 'எல்.சி.டி., டிவி' பொருத்தப்பட்டு உள்ளது.நெல்லை கலெக்டர், சந்தீப் நந்துாரி, ஸ்மார்ட் வகுப்பறையை துவக்கி வைத்தார். கம்ப்யூட்டர் மூலம், மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதமாக, எல்.சி.டி., திரையில் பாடம் நடத்தப்படவுள்ளது.
நெல்லை மாவட்டத்தில், பல்வேறு அரசு தொடக்க, நடுநிலை பள்ளி களில், கம்ப்யூட்டர் வசதியுடன், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 5ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு செய்முறை விளக்கத்துடன் சமச்சீர் கல்வி பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது.இந்நிலையில், மானுார் ஒன்றியம், பாலாமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், செல்கோ இந்தியா நிறுவனத்தின் சார்பில், சூரியஒளி மின்சாரம் மூலம், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டது. வகுப்பறையில், கரும்பலகை மீது,40 அங்குல, 'எல்.சி.டி., டிவி' பொருத்தப்பட்டு உள்ளது.நெல்லை கலெக்டர், சந்தீப் நந்துாரி, ஸ்மார்ட் வகுப்பறையை துவக்கி வைத்தார். கம்ப்யூட்டர் மூலம், மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதமாக, எல்.சி.டி., திரையில் பாடம் நடத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...