வருகின்ற (2018-2019) பட்ஜெட்டிலாவது கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் வாய்பப்பு வழங்குமா தமிழக அரசு? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Wednesday 21 March 2018

வருகின்ற (2018-2019) பட்ஜெட்டிலாவது கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் வாய்பப்பு வழங்குமா தமிழக அரசு?

வருகின்ற (2018-2019) பட்ஜெட்டிலாவது கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் வாய்பப்பு வழங்குமா தமிழக அரசு?

40000 பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு (வாழ்வு)கொடுக்குமா தமிழக அரசு!


தமிழக அரசு ஆதாரித்தால் தான் தனியார் பள்ளிகளில் கூட பணி புரியும் வாய்ப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இதற்க்கான

புதிய வரண்முறையும் அரசானையும் தமிழக அரசு விரைவில் உருவாக்கித் தர வேண்டும்..

தனியார் பள்ளிகள் கூட கணினி ஆசிரியர்களை  உரிய கல்வித் தகுதிகள் இருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் நிடித்து வருகின்றது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU)மூலம் இதுவரை 40000பேர்.

கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் எங்கும் பணிக்கு செல்ல முடியாத அவல நிலை உள்ளது.
காரணம் தமிழக அரசு நடத்தும் எந்த ஒரு தகுதி தேர்வாக இருந்தாலும் ஆசிரியர்கள் பணிநியமனமாக இருந்தாலும்   கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை பி.எட் படித்த ஆசிரியர்களுக்கு வாயப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன எதனால்.?

இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசுதான் மற்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் போன்று கணினி ஆசிரியர்களுக்காக உரிய பணி வரண்முறையை தமிழக அரசு உருவாக்கி தரவில்லை இதனால் அரசுப்பள்ளிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி கணினி ஆசிரியர்கள் பணிக்கு செல்ல  முடியாத அவல நிலை
இன்றாளவும் உள்ளது.

அரசே தனியாரே அவை எங்கு இருந்தாலும் அங்கு பணி புரியும் மற்ற தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பட்டதாரி ஆசரியர்கள் என்றால்  இளங்களை பட்த்துடன் பி.எட் ,பட்டம் கட்டாயம்,முதுகலை ஆசிரியர்கள் என்றால் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் பட்டம் கட்டாயம்.

ஆனால் தமிழகத்தில்  பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு  அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்திற்கு என முறையான கல்வி தகுதி எங்கும்

பின்பற்ற படுவதில்லை எனவே கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று உரிய பணிபுரிய வரண்முறையும் அரசானையும் உருவாக்கி தந்தால் தான் 40000 கணினி ஆசிரியர்களுக்கு வாழ்வு .
எங்கும் கணினி எதிலும் கணினி என்று நோக்கி செல்லும் கால கட்டத்தில்

கணினி கல்விக்கும் கணினி ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தொடர்ந்து மெத்தன போக்குடன் செய்படுவது ஏன்?

இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளியில் கட்டாயம் நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை
கணினி அறிவியல் பாடபுத்தகம் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படாத நிலையில் உள்ளது.
தற்போது அதன் நிலை குப்பையில் தொட்டியில் போடப்பட்டது
என RTI தகவல் அளிப்பது வேதனைக்குறியது.


கணினி அறிவியல் பாடம் நடைத்தப்படுவது எதற்க்காக.

அரசு பள்ளியில் பணி புரியும் மற்ற பாட ஆசிரியர்களுக்கு அரசு பல ஆண்டு காலமாக பல கோடி ரூபாயை
செலவு செய்து பயிற்சி கொடுத்தம் பலன் இல்லை காலங்கள் மாறி வரும் போதே அதற்கு ஏற்ப பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் பாடங்களுக்கு தகுந்து ஆசிரியரகளை நியமிக்க வேண்டும்.

அந்தந்த பாடங்ளுக்கு தனித்தனியாக பி.எட் பட்டம் எதற்க்காக உருவாக்க வேண்டும்.இதற்கு தான் தமிழக அரசு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU)  40000 பிஎட் கணினி அறிவியல் ஆசிரியர்களை வேலையின்றி உருவாக்கியுள்ளது .
எந்த ஒரு பணிக்கும் தாங்கள் கொடுக்கும் பி.எட் பட்டம் செல்லகாசக உள்ளது.தாங்கள் கொடுக்கும் பிஎட் பட்டத்தினால் தனியார் நிறுவனங்களில் கூட  வேலைக்கு செல்ல முடிய நிலை இன்றாளவும் உள்ளது அப்படி பணிக்கு செல்ல நான் படித்த பட்டத்தை மறைத்து பணிக்கு செல்லும்  நிலை ஏன்?

தமிழக அரசு !

இனியாவது  தமிழக பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு  அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் முறையான கல்வி தகுதி பின்பற்ற படவேண்டும்

ஆகவே கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று பணிபுரிய வரண்முறை உருவாக்கி அதற்க்கான அரசானையை விரைவில் வெளியிட வேண்டும்.

செல்வி நா.ரங்கநாயகி,
மாநில மகளிர் அணி தலைவி,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H