சிறுநீரக கல் பிரச்சினையால்
அவதிப்படுகிறவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுநீரக கல்
பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும்.
அதோடு பழ ஜூஸ்வகைகள், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவைகளையும் பருக
வேண்டும். அவை சிறுநீரக கல் உருவாகுவதை தவிர்க்க உதவும்.
கால்சிய சத்து கொண்ட உணவுகளை குறைவாக உட்கொள்வதும் சிறுநீரக கல் பிரச்சினை
ஏற்பட வழிவகுக்கும். கால்சிய உணவுகளை தவிர்க்கும்போது உடலில் ஆக்சலேட்
எனும் உப்புச்சத்து அதிகரிக்க தொடங்கி, சிறுநீரக கற்கள் உற்பத்தியாக
வழிவகுத்துவிடும். அதை தவிர்க்க சோயா பால், தயிர், பாதாம், சூரியகாந்தி
விதைகள் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். அதேநேரத்தில்
சாக்லேட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காபி, வேர்க்கடலை போன்றவற்றில்
ஆக்சலேட் அதிகம் கலந்திருக்கும். ஆதலால் அவற்றை அதிகம் சாப்பிடுவதை
தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...