இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அறிவுறுத்தலின்படி, வரும்
ஜூலை மாதம் முதல் தொலைதூர முறையில், வேளாண் பட்டப்படிப்புகள் நடத்த தடை
விதித்து, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.பல்கலை மானியக்குழு
கண்காணிப்பில், நாட்டில் பல்வேறு பல்கலைகள், தொலைதூர கல்வி முறையை
செயல்படுத்தி வருகின்றன*
இதன் விதிமுறைகளின் படி, தொழில் சார்ந்த படிப்புகளான,
பொறியியல், மருத்துவம், பிசியோதெரபி, பல் மருத்துவம், பார்மசி, நர்சிங்,
ஆர்க்கிடெக்சர் உட்பட படிப்புகளை, தொலைதூர கல்வி முறையில் வழங்க இயலாது*
இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின்
அறிவுறுத்தலின் படி, வேளாண் பட்டப் படிப்புகளையும், தொலைதூர முறையில் வழங்க
தடை அறிவிக்கப்பட்டுள்ளது*
தொலைதூர கல்வி முறையில், 2019- - 20ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, ஜூலை மாதம் முதல் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது*
இத்தடை, ஜூலை மாதம் முதலே நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது*
இதன் படி, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், தொலைதூர கல்வி
முறையில் வேளாண் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...