தனியார் பள்ளிகளுக்கு நிகராக உள்ள அரசு பள்ளிகளில், பெற்றோர்,
தங்களது குழந்தைகளை சேர்க்க முன்வரவேண்டும்' என, மாவட்ட கல்வி அலுவலர்
பேசினார்
திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் நடுநிலைப்
பள்ளியில், சீர்வரிசை, புதிய மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி, பள்ளி தலைமை
ஆசிரியர் சுமதி தலைமையில் நடந்தது
பெற்றோர், பள்ளிக்கு, பிரின்டர், டிவிடி பிளேயர், ஆம்பிளிபர்,
நாற்காலி, பாய், சில்வர் குடங்கள், தண்ணீர் டிரம், நோட்டு புத்தகங்கள்
உள்பட, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கினார்.
மேலும், 11 புதிய மாணவர்கள் சேர்த்தனர். பள்ளி சீர்வரிசை,
புதிய மாணவர்களின் ஊர்வலத்தை, திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் லோகமணி
துவக்கி வைத்தார்
மங்கள மேளத்துடன் துவங்கிய ஊர்வலம், பள்ளி நுழைவு வாயில் அடைந்தது
மங்கள மேளத்துடன் துவங்கிய ஊர்வலம், பள்ளி நுழைவு வாயில் அடைந்தது
அப்போது புதிய மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.பின்,
மாவட்ட கல்வி அலுவலர் லோகமணி பேசியதாவது:இப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறை
உள்ளது. இங்கு பணிபுரியும், அனைவரும் பெண் ஆசிரியர்கள்
♦♦தனியார் பள்ளிக்கு நிகராக உள்ள இப்பள்ளியில், ஒவ்வொரு
பெற்றோரும் தங்களது குழந்தைகளை சேர்ப்பதுடன், அவர்கள், தலா, 10 மாணவர்களை
அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...