விராலிமலை,மார்ச்.24: வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய
நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் குடுமியான்மலையில் சிறப்பு
முகாம் நடைபெற்று வருகிறது.
முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் சார்பாக பாலித்தீன் பயன்பாட்டினை தவிர்த்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் செ.சுகன்யா கண்ணா தொடங்கி வைத்தார்.
முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் சார்பாக பாலித்தீன் பயன்பாட்டினை தவிர்த்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் செ.சுகன்யா கண்ணா தொடங்கி வைத்தார்.
பேரணியில் கலந்து கொண்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பாலித்தீன்
பைகளை ஒழிப்போம், நீர்வளம் காப்போம் போன்ற முழக்கங்களை எழுப்பியவாறு
முக்கிய வீதிகளை வலம் வந்தனர். மேலும் ஊர்ப்பொது மக்களிடம் பாலித்தீன்
பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் அதற்கான மாற்றுப் பொருள்கள் குறித்தும்
மாணவர்கள் கலந்துரையாடினர்கள்.
பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை வீடுகள்தோறும் சென்று நட்டு வைத்தனர். அவற்றை முறையாக பராமரிக்கும் படி வீட்டின் உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன் விவசாயத்திற்கு கூட்டுறவு சங்கத்தின் சேவைகள் குறித்துப் பேசினார்.
உயிரியல் முறையில் பூச்சிக்கட்டுப்பாடு குறித்து முனைவர் செ.சுகன்யா கண்ணா பேசினார்.
பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் குறித்து மருத்துவர் அனுஷா மக்களிடம் கலந்துரையாடினர்.
இறுதியாக மகளிருக்கான கோலப்போட்டிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..
பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை வீடுகள்தோறும் சென்று நட்டு வைத்தனர். அவற்றை முறையாக பராமரிக்கும் படி வீட்டின் உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன் விவசாயத்திற்கு கூட்டுறவு சங்கத்தின் சேவைகள் குறித்துப் பேசினார்.
உயிரியல் முறையில் பூச்சிக்கட்டுப்பாடு குறித்து முனைவர் செ.சுகன்யா கண்ணா பேசினார்.
பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் குறித்து மருத்துவர் அனுஷா மக்களிடம் கலந்துரையாடினர்.
இறுதியாக மகளிருக்கான கோலப்போட்டிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...