50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்
♦50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பெருங்கடலில் வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது.
♦தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் பால் என்பவரும் அவரது 9 வயது மகன் ஜியா எலியட்டும் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடற்கரை மணலில் பாட்டில் ஒன்று கிடந்துள்ளது.
♦அந்த பாட்டிலுக்குள் கடிதம் ஒன்றும் அடைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை எடுத்து பார்த்ததும், அது 1969ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி , அப்போது 13 வயதான கில்மோரே என்பவர் அந்த கடிதத்தை எழுதியது தெரிய வந்தது.
♦அந்த கடிதத்தில் ''இங்கிலாந்தில் இருந்து மெல்போர்ன் நகரத்திற்கு குடிபெயர்கிறேன், கப்பலில் இருந்து கடிதத்தை எழுதுகிறேன் , யார் இந்த கடிதத்தை பெறுகிறீர்களோ அவர்கள் பதில் அனுப்புங்கள்'' என அதில் கூறப்பட்டுள்ளது.
♦இந்நிலையில் அந்தக் கடிதத்தை எழுதிய கில்மோராவுக்கு எலியட் தற்போது பதில் அனுப்பியுள்ளார்.
♦கடிதம் எழுதியபோது 13 வயதான கில்மோரே, தற்போது 63 வயதில் மீண்டும் இங்கிலாந்துக்கே குடிபெயர்ந்தது வாழ்ந்து வருகிறார்.
♦Friends social media
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...