அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.....
""""ஆடி அமாவாசை""""'
முன்னோர்களுக்கு திதி கொடுத்து விரதம் இருந்து அவர்களை வழிபடுதல்......
வரும் 31.07.2019.. புதன் கிழமை ஆடி 15 அன்று அமாவாசை.... காலை 11 35 முதல் ஆரம்பிக்கிறது மறுநாள் அதாவது வியாழக்கிழமை 9 21 முடிகிறது.....
திதிகளைப் பொறுத்தவரை....
""முழு இரவுக்கு முன் பகல்"" என்பதுதான் சரி..
எனவே 31.07.2019 ஆடி 15 புதன்கிழமையன்று சூரிய உதயத்திற்கு பிறகு...
தாராளமாக நதிக்கரைகளில் தர்ப்பணம் கொடுக்கலாம்.....
(ஒரு சில காலண்டர்களில் வியாழக்கிழமை என காண்பிக்கப்பட்டுள்ளது)
ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாளே அமாவாசை...
மேலும் மாதம்தோறும் வரும் அமாவாசை திதியில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம்.
அப்படி கொடுக்க முடியாவிட்டாலும்,
ஆடி அமாவாசை,
புரட்டாசி மகாளாய அமாவாசை,
தை அமாவாசை
ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை...
தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசை முன்னோரை நினைவு கூர முக்கியமான நாள்.
சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர்.
அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை.
எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும்,
அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.... என்கிறது சாஸ்திரம்.
அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவாசை ஆகும்.
எனவே, அன்றும்.... அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை.
அன்றும்.... அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
இந்த மூன்று அமாவாசை தினங்களில் நாம் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த தலங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ராமேஸ்வரம் மிகவும் முக்கியமானதும் விசேஷமானதுமான தலம் ஆகும்.
ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்தில் கடல் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அளவற்ற நன்மைகளைத் தரவல்லது.
குறிப்பாக அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் விசேஷம்.
ஆடி தர்ப்பணம்
ஆடி அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை காலையிலேயே தொடங்கிவிடவேண்டும்...
(இந்த விகாரி ஆண்டில் அமாவாசை திதி தாமதமாக ஆரம்பித்தாலும்.... முழு இரவிற்கு முன் பகல்.... அதே திதியாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.)
ஏதேனும் ஒரு தீர்த்தக் (நதி) கரைக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்து வரவேண்டும்.
மதுரை பக்கம் உள்ளவர்கள்.... திருவேடகத்தில் கொடுக்கலாம்....
இது சிவாலாயத்தோடு... கூடிய "" காசி''" க்கு நிகரானது.
இங்கு வைகை தெற்கு வடக்காக ஓடுகிறது..
மதியம் வீட்டில் மறைந்த நம் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி, ஓர் இலையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளைப் படைக்கவேண்டும்.
பின்னர் தீபாராதனை காட்டி, காகத்துக்கு உணவளிக்க வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களை முதலில் சாப்பிடச் செய்யவேண்டும். பிறகே நாம் சாப்பிடவேண்டும். இப்படிச் செய்வதால், நம் முன்னோர்கள் மிகவும் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.
அவர்களுடைய ஆசிகளால் நம் வாழ்க்கையும் நம் சந்ததியினரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் நிறைந்ததாக அமையும் என்பது உறுதி.
மேலும்....
சந்திரன் ஆட்சி பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம்.
சூரியன் சிவ அம்சம், சந்திரன் சக்தியின் அம்சம்.
இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் """ஆடி அமாவாசை""" முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை.
தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை.
மேற்சொன்ன கடக ராசி நீர் ராசியாகவும், மகர ராசியில் திருவோணம் நட்சதிரத்தில்தான் சூரி சந் இணைவு...அதன் அதிபதி சந்திரன் (நீர் நிலைகள்) என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது.
இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.
வாருங்கள் நண்பர்களே.....
நம்முடைய வாழ்க்கையும், நம்சந்ததியினரின் வாழ்க்கையும், மகிழ்ச்சியும்...சகல செல்வங்களும் நிறைந்ததாக அமைய நம்முன்னோர்களை இந்த நாட்களில் வணங்குவோம்.....
அன்புடன்
ஜோதிடர் கோபிக்குமார்
9842154396
""""ஆடி அமாவாசை""""'
முன்னோர்களுக்கு திதி கொடுத்து விரதம் இருந்து அவர்களை வழிபடுதல்......
வரும் 31.07.2019.. புதன் கிழமை ஆடி 15 அன்று அமாவாசை.... காலை 11 35 முதல் ஆரம்பிக்கிறது மறுநாள் அதாவது வியாழக்கிழமை 9 21 முடிகிறது.....
திதிகளைப் பொறுத்தவரை....
""முழு இரவுக்கு முன் பகல்"" என்பதுதான் சரி..
எனவே 31.07.2019 ஆடி 15 புதன்கிழமையன்று சூரிய உதயத்திற்கு பிறகு...
தாராளமாக நதிக்கரைகளில் தர்ப்பணம் கொடுக்கலாம்.....
(ஒரு சில காலண்டர்களில் வியாழக்கிழமை என காண்பிக்கப்பட்டுள்ளது)
ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாளே அமாவாசை...
மேலும் மாதம்தோறும் வரும் அமாவாசை திதியில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம்.
அப்படி கொடுக்க முடியாவிட்டாலும்,
ஆடி அமாவாசை,
புரட்டாசி மகாளாய அமாவாசை,
தை அமாவாசை
ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை...
தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசை முன்னோரை நினைவு கூர முக்கியமான நாள்.
அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை.
எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும்,
அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.... என்கிறது சாஸ்திரம்.
அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவாசை ஆகும்.
எனவே, அன்றும்.... அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை.
அன்றும்.... அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
இந்த மூன்று அமாவாசை தினங்களில் நாம் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்தில் கடல் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அளவற்ற நன்மைகளைத் தரவல்லது.
குறிப்பாக அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் விசேஷம்.
ஆடி தர்ப்பணம்
ஆடி அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை காலையிலேயே தொடங்கிவிடவேண்டும்...
(இந்த விகாரி ஆண்டில் அமாவாசை திதி தாமதமாக ஆரம்பித்தாலும்.... முழு இரவிற்கு முன் பகல்.... அதே திதியாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.)
ஏதேனும் ஒரு தீர்த்தக் (நதி) கரைக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்து வரவேண்டும்.
மதுரை பக்கம் உள்ளவர்கள்.... திருவேடகத்தில் கொடுக்கலாம்....
இது சிவாலாயத்தோடு... கூடிய "" காசி''" க்கு நிகரானது.
இங்கு வைகை தெற்கு வடக்காக ஓடுகிறது..
பின்னர் தீபாராதனை காட்டி, காகத்துக்கு உணவளிக்க வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களை முதலில் சாப்பிடச் செய்யவேண்டும். பிறகே நாம் சாப்பிடவேண்டும். இப்படிச் செய்வதால், நம் முன்னோர்கள் மிகவும் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.
அவர்களுடைய ஆசிகளால் நம் வாழ்க்கையும் நம் சந்ததியினரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் நிறைந்ததாக அமையும் என்பது உறுதி.
மேலும்....
சந்திரன் ஆட்சி பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம்.
சூரியன் சிவ அம்சம், சந்திரன் சக்தியின் அம்சம்.
இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் """ஆடி அமாவாசை""" முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை.
தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை.
மேற்சொன்ன கடக ராசி நீர் ராசியாகவும், மகர ராசியில் திருவோணம் நட்சதிரத்தில்தான் சூரி சந் இணைவு...அதன் அதிபதி சந்திரன் (நீர் நிலைகள்) என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது.
இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.
நம்முடைய வாழ்க்கையும், நம்சந்ததியினரின் வாழ்க்கையும், மகிழ்ச்சியும்...சகல செல்வங்களும் நிறைந்ததாக அமைய நம்முன்னோர்களை இந்த நாட்களில் வணங்குவோம்.....
அன்புடன்
ஜோதிடர் கோபிக்குமார்
9842154396
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...