தமிழக பள்ளிகளில் மாணவர்கள் கையில் வண்ண கயிறு, நெற்றியில் திலகம்
அணிந்து வருவதை ஜாதி அடையாளமாக சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்குமாறு,
தமிழக பள்ளி கல்வித்துறை, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும்
சுற்றறிக்கை அனுப்பி, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஏதோ ஒரு
பள்ளியில் நடை பெற்ற ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டி அரசு அனைத்து
பள்ளிகளுக்கும் பொருந்துவதைப் போன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளதற்கு பாஜக
தேசிய செயலாளர் எச்.ராஜா, அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து அமைப்புகள் உட்பட
தமிழகத்திலுள்ள பல அமைப்புகள், பிரமுகர்கள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக
தெரிவித்தனர்.
ஜாதி
மற்றும் மதத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் செயல்படுவதாகவும், அதனை
சரிபார்க்க வேண்டும் என ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், பள்ளி
கல்வித்துறை இயக்குனருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கை
அப்படியே, மாவட்ட கல்வி இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இது அரசின்
கவனத்திற்கு வரவில்லை. எது நடைமுறையில் இருக்கிறதோ அந்த நடைமுறைகள்
பின்பற்ற வேண்டும் என்பது அரசின் கொள்கை. அதனை பின்பற்ற வேண்டும் என
வலியுறுத்தியுள்ளோம். வண்ணக்கயிறு கட்டுவது தொடர்பான அரசின் சுற்றறிக்கை
தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய உத்தரவு செல்லாது என்றும்
முந்தைய நிலையே நீடிக்கும் என்றும் அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்படாமலயே
இந்த சம்பவம் நடந்துவிட்டதாகவும் கூறி பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி
வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் :
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...