புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 14 ஆண்டு கால பள்ளிபாடத்
திட்டங்களை மாற்ற, என்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்துள்ளது. தேசிய அளவில்,
பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும்,
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது. 14
ஆண்டுஇந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், ருஷிகேஷ் சேனாபதி,
டில்லியில் கூறியதாவது:
தேசிய அளவில், பள்ளி பாடத் திட்டங்களை, 1975, 1988, 2000, 2005 ஆகிய
ஆண்டுகளில், என்.சி.இ.ஆர்.டி., மாற்றியமைத்துள்ளது.கடந்த, 14 ஆண்டுகளாக
அமலில் உள்ள, பள்ளி பாடத் திட்டத்தை, புதிய கல்விக் கொள்கையின்
அடிப்படையில் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இம்மாத
இறுதியில், ஆய்வு கமிட்டி அறிவிக்கப்படும்.
ஆய்வு கமிட்டிபுதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டவுடன். ஆய்வு கமிட்டி,
தேசிய அளவில் பள்ளி பாடத் திட்டங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்
பற்றி, ஆய்வு செய்து முடிவெடுக்கும். என்.சி.இ.ஆர்.டி., பாடப்
புத்தங்களையும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வியை சுமையாக கருதாமல்,
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்கும் வகையில், பாடத் திட்டங்கள் இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார். பள்ளிகளில் நீர் மேலாண்மை'பள்ளிகளில் நீர்
மேலாண்மையை செயல்படுத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய
இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.டில்லி, பெங்களூரு, சென்னை,
ஐதராபாத் உட்பட, நாட்டில், 21 நகரங்களில், நிலத்தடி நீர் வற்றி விடும்
அபாயம் உள்ளது என, 'நிடி ஆயோக்' எச்சரித்துள்ளது.
இந்நிலையில், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் சி.பி.எஸ்.இ.,
கூறியிருப்பதாவது:பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த
வேண்டும். பழைய சாதனங்களை நீக்கி, நீரை சேமிக்கும் வகையில், புதிய
கருவிகளை பயன்படுத்த வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில், சி.பி..எஸ்.இ.,
பள்ளிகள் அனைத்திலும், நீர் மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட
வேண்டும்.இவ்வாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...