ஆரம்பத்தில் இலவசமாக கொடுக்கிற மாதிரி கொடுத்து விட்டு பின்னால் அதற்கு
வசூல் செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் தெரிந்தும்
அதில் மாட்டிக்கொள்வது தான் நமது மக்களின் பழக்கமாகும். அம்பானி
சகோதரர்களின் ஜியோ நிறுவனம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு,
முதலில் சிம் கார்டுகளை இலவசமாக கொடுத்தனர். 4G அமைப்புடன் வந்த இந்த சிம்
கார்டுகளால் 4G தரம் கொண்ட மொபைல் போன்கள் மளமளவென விற்றுத் தீர்ந்தன.
சிறிது நாட்கள் கழித்து ஜியோ நிறுவனம் தங்களது சேவைக்கு ஒரு கட்டணத்தை
நிர்ணயித்தது. அதாவது மாதத்திற்கு ஒரு கட்டணமும், மூன்று மாதங்களுக்கு ஒரு
கட்டணமும் மேலும் வருடத்திற்கு ஒரு கட்டணம் என நிர்ணயித்தனர். இதனால்
தடையில்லாத கால் பேசும் அமைப்பை கொண்டு வந்த ஜியோ நிறுவனம், தற்போது தனது
வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அதாவது இனிமேல் ஜியோ சிம்மில் இருந்து இதர
நெட்வொர்க்களுக்கு கால் செய்தால் நிமிடத்திற்கு 6 பைசா வீதம்
வசூலிக்கப்படும் என ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி
அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...