பகலில் குட்டித்தூக்கம் இதயத்துக்கு நல்லதுதான். ஆனால்...!' - என்ன சொல்கிறது ஆய்வு முடிவுகள்?
'பணியிடமோ இல்லமோ... உங்கள் வேலைக்கு இடையில் தூக்கம் வருவது நல்லதுதான்'
என்கின்றனர் ஆய்வாளர்கள். பொதுவாகவே பணிக்கு இடையில் தூங்குவதென்பது
உடல்சோர்வாகவோ சோம்பேறித்தனமாகவோதான் பலராலும் பார்க்கப்படுகிறது.
உண்மையில் பகல் நேரத்தில் போடும் குட்டித்தூக்கமென்பது ஒருவர்
புத்துணர்வுடன் செயல்பட உதவும் ஒரு விஷயம்.
Nap at Work
வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை குட்டித்தூக்கம் போட்டால் இதய
பிரச்னைகள் தடுக்கப்படும். குறிப்பாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கான
சாத்தியக்கூறுகள் 48 சதவிகிதம் குறையும். இந்த நன்மைகள் அனைத்தையும்
ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர் லண்டனைச் சேர்ந்த 'ஹார்ட்' என்ற இதழியல்
ஆராய்ச்சியாளர்கள்.
ஆய்வாளர்கள்அளவுக்கு மீறிய குட்டித்தூக்கம் ஆபத்தாகலாம். ஆகவே, வாரத்தில்
மூன்று முறைக்கு மேல் பகலில் தூங்க வேண்டாம்!
'அதே சமயம் அளவுக்கு மீறிய குட்டித்தூக்கம் ஆபத்து' என்றும்
எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள். 'வாரத்தில் மூன்று முறைக்கு மேல் பகலில்
தூங்குபவர்களுக்கு இதய நலனில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாம்.
முக்கியமாக ரத்த அழுத்தப் பிரச்னை, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகள்
ஏற்படலாம்' என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
Heart Health
`எனக்குப் பகலில் அடிக்கடி தூக்கம் வரும். தூங்கியே தீருவேன்' என்பவர்கள்
அன்றாடம் முறையான உடற்பயிற்சி, மனநிறைவான வாழ்க்கை சூழல், மிகச்சரியான
உணவுமுறை போன்ற ஆரோக்கியமான வாழ்வியலை ஏற்படுத்திக்கொள்ளும்பட்சத்தில்
தங்களின் இதய நலனை உறுதி செய்துகொள்ளலாம். இல்லையென்றால், சிக்கல்தான்
பாஸ்!
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...