தேன் மிட்டாய்களுக்கு...
அன்புக்குறுங்கவிதைகளே
அகிலத்தின் அடர் ஆனந்தம் நீங்கள்
சிறு சிறகால் பேருலகின் மகிழ்வளக்கும் மாசற்ற மாணிக்கங்கள் நீங்கள்
அன்னை அப்பனென பதவி உயர்வளிக்கும் குடும்பக் குட்டி அதிகாரிகள்
மொழியைத் தேனினும் இனிதாக்கும் பாலகர்கள்
தவழ்ந்தே காரியம் சாதிப்போர் மத்தியில் தன்மான நடைபயில தவழும் தங்கக்கட்டிகள்
பெரியோரின் துயரங்கள் அத்தனையும் நொடிப்பொழுதில் காணாமலாக்கும் வலிநீக்கிகள்
மெல்மனதால் பொழுதுகளை ரம்மியமாக்கும் பால்வாசங்கள்
எதிர்காலத்தின் எழுத்தாணிகள்
வரலாற்றின் புது அத்தியாயங்கள்
புதுமைகளின் குட்டித்தொடக்கங்கள்
உங்கள் உலகெப்போதுமே பேரழகு
உங்களால் ஆகிறது இப்பாரழகு
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
உங்கள் விரல்பற்றி உங்கள் உணர்வறிந்து இன்பத்தின் பாதையில் உடன் பயணிக்கிறோம் நாங்கள்
மகிழ்வெப்போதும் நிலைக்கட்டும்
கவலையும் பயமும் அகலட்டும்
உங்களைத்தாங்கி உடன் வருகிறோம் நாங்கள்
பாராளுங்கள் பள்ளிப்பூக்களே
எங்கள் மிச்சக்காலங்களும் உங்கள் நாட்களே
இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளுடன்,
சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...