உடல் சுத்தம் போலவே உடலில் இருக்கும் உறுப்புகளும் சுத்தமாக
இருக்க வேண்டும். அதிலும் பற்கள். ஆரோக்கியத்திலும் அழகிலும் முக்கிய பங்கு
வகிப்பவை.அந்த பற்களை முறையாக பராம ரிக்க வேண்டும் .இல்லையென்றால்
ஆரோக்கியத்தின் முதல் படியாக ஜீரணக்கோளாறுகளை உண்டாக்கும் என்கிறார் பல்
மருத்துவ நிபுணர் சுரேஷ். ஏன் தெரிஞ்சுக்கலாம் வாங்க...
பற்கள்
நம் உடம்பில் கடினமான உறுப்பு எது என்று கேட்டால் என்ன
சொல்வீர்கள். எலும்பு என்பதுதான் பல ரது பதிலாக இருக்கும். ஆனால் உண்மையில்
உடலில் கடினமான உறுப்பு என்றால் அது பற்கள் தான்.
மென்மையான உணவுகளை மட்டுமல்ல கடினமான உணவுகளையும் கடித்து
சாப்பிட உதவுவது பற் கள் தான். அந்த பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான்
வாழும் காலம் வரை உணவு உண்பதி லோ, பல் சம்பந்தப்பட்ட ஆரோக்கிய குறைபாடு
என்பதிலோ எந்த பிரச்சனையும் வராது.
பெரும்பாலானோர்கள் பற்கள் சாப்பிட மட்டும் தான் உதவும் என்று நினைத்து பராமரிக்க தவறுகி றார்கள். இதுவும் சரியானது அல்ல.
அழகு தரும்
அழகாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பற்களை பராமரிக்க
வேண்டும். ஏனென்றால் நமக்கு அழகிய புன்னகை தருவது பற்கள் தான். பற்கள்
வரிசையாக கறையில்லாமல் இருந்தால் தான் அழகு என்று நினைக்கிறார்கள் . ஆனால்
இது முற்றிலும் தவறானது.
நமது முகத்தில் மூக்கின் கீழ் ஓர் உப்பிய தன்மையைத் தருவது
பற்களின் அமைப்பும், பற்களும் தான். அப்படியிருக்க முகத்தில் பற்கள்
இல்லாவிட்டால் எப்படியிருக்கும்.
மூக்கின் கீழ் சப்பையாக இருக்கும். உதடுகள் உள்ளடங்கி வாயின்
ஓரங்களில் சுருக்கம் தெரியவும் வாய்ப்புண்டு. இது எப்படியிருக்கும் என்று
கற்பனை செய்து பாருங்கள். அது மட்டுமா பற்கள் இல் லாமல் நம்மால்
தெளிவாகவும் பேச முடியாது அழகு பேச்சு இரண்டையும் இறுதிகாலம் வரை பெறு
வதற்கு பற்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.
பல்லும் ஜீரணமும்
பல்லுக்கும் ஜீரணத்துக்கும் சம்பந்தம் உண்டு. தண்ணியாக
இருந்தாலும் உணவாக இருந்தாலும் வாய்க்குள் வைத்தவுடன் வழுக்கி செல்வதில்லை.
பற்களின் மீது படாமலும் இருப்பதில்லை. சிறிய உணவாக இருந்தாலும் பற்கள்
அந்த உணவை மெல்லும்போது உமிழ்நீரையும் சேர்த்துக்கொண்டு நன்றாக
அரைக்கின்றன.
அப்படியிருக்கும் போது அவசர யுகத்தில் வேகவேகமாக உணவை
அரைக்காமல் உமிழ்நீரும் சேரா மல் அப்படியே விழுங்குவதில் தான் ஆர்வம்
காட்டுகிறார்கள் இன்றைய தலைமுறையினர் பெரும் பாலும் இங்குதான்
தொடங்குகுகிறது அஜீரணக்கோளாறு. அதனால் தான் உணவை நன்றாக மென் று உணவில்
கவனம் வைத்து சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறினார்கள்.
பல்லும் உணவும்
இன்றைய தலைமுறைகள் சாப்பிடும் போது உணவிலும் கவனம்
செலுத்துவதில்லை. உணவு முறை பழக்கங்களால் நவீன உணவுகளுக்கு மாறிவிட்டாலும்
அதையும் அரைத்து உண்பதில்லை.
முன்பு மிருதுவான இட்லியை கூட அரைத்து சாப்பிட்டார்கள்.
கரும்பு கடினமாக இருந்தாலும் எலும்பு கள் கடினமாக இருந்தாலும் பற்களால்
கடித்து மென்று சாப்பிடும் அளவுக்கு பற்களில் வலு இருந்த து. இன்று இட்லியை
கூட அவசரமாக விழுங்கி கொண்டிருக்கிறோம்.
மேலும் டீவி, செல்ஃபோன் என்று பார்வையை அதில் பதித்து
இயந்திரமாக சாப்பிடும் போது உண வின் மீதும், உணவு பொருள்களின் மீதும் கவனம்
செலுத்துவதில்லை. இன்று சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே
இப்படித்தான் இருக்கிறார்கள்.
பற்கள் சுத்தம்
பற்களை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று கால்மணி நேரம் பல்
துலக்குபவர்கள் பற்களை பாது காப்பதில்லை மாறாக பல் எனாமலை தேய்மானத்துக்கு
உள்ளாக்குகிறார்கள். பற்களில் படியும் பாக்டீரியாக்கள் சாப்பிடும்
பொருள்களில் எஞ்சியிருக்கும் துகள்களால்தான் உண்டாகிறது. அத னால் தான்
ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் வாய் கொப்புளிக்க வேண்டும் என்று அறி
வுறுத்துவது.
பற்களின் சுத்தம் கேள்விக்குறியாகும் போது பற்சிதைவு பிரச்சனை
உண்டாக வாய்ப்புண்டு. அதை யும் அலட்சியம் செய்யும் போது பற்சிதைவு
அதிகமாகி பற்களை நீக்கம் செய்யும் அளவுக்கு ஆபத் தை உண்டாக்கிவிடும்.
எப்படி செய்வது
உணவுக்கு மட்டுமல்ல ஸ்நாக்ஸ் போன்ற நொறுக்குதீனிகளும் இதில்
அடங்கும். சாப்பிட்டு முடித்தது ம் வாய்கொப்புளிப்பதோடு தினமும் இரண்டு
வேளை பல் துலக்குவதும் பற்கள் பாதுகாப்பை உறு திபடுத்தும். துர்நாற்ற
பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் மிதமான வெந்நீரில் உப்பு நீரை சேர்த்து
கொப்புளித்துவந்தாலும் பற்கள் பலப்படும். கிருமிகள் வெளியேறும்.
துர்நாற்றமும் நீங்கும்.
பற்கள் துலக்கும் போது மேல் இருக்கும் பற்களை மேல் இருந்து
கீழாகவும் கீழ் இருக்கும் பற்களை கீழிருந்து மேலாகவும். தேய்க்க வேண்டும்.
அப்போதுதான் பற்கள் ஈறுகளோடு இணைந்து பலமாக இருக்கும்.
பற்களுக்கு எதிரி
அதிகப்படியான இனிப்பு வகைகள், குளிர்ச்சியான பொருள்கள், அதிக சூடான பொருள்கள் போன்ற வற்றை எப்போதும் தவிர்க்க வேண்டும்.
தினமும் இனிப்பு வகைகளை எடுத்துகொள்ளும் போது அவை பற்சிதைவை
தூண்டுகின்றன. பற்க ளின் எனாமலை பாதிக்கும் குளிர்பானங்களையும் தவிர்க்க
வேண்டும்.பழச்சாறுகள் பற்களுக்கு பாதிப்பை உண்டாக்குவதில்லை. எனினும் எதை
சாப்பிட்டாலும் உடனடியாக வாய் கொப்புளிக்க செய்வது பற்களின் ஆயுளை
பாதுகாக்கும். குறிப்பாக வளரும் குழந்தைகள் பற் சொத்தை பிரச்சனையால் அதிகம்
பாதிக்கப்படுகிறார்கள்.
ஐஸ்க்ரீம், சாக்லெட், குளிர்பானங்களை அதிகம் வாங்கி
கொடுக்கும் பெற்றோர்கள் அதைக் குறைப் பதோடு பற்களின் பராமரிப்பையும்
கற்றுத்தரவேண்டும். அதை விட முக்கியமாக உணவை உமிழ் நீரோடு மென்று
சாப்பிடவும் பழக்க வேண்டும்.
அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கியமானது பற்கள் பாதுகாப்பு.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...