யானைக்கு எது சிறப்பு தும்பிக்கையா? செவியா?பலமா? கால்களா? அல்லது தந்தமா? நிச்சயமாக தந்தம் தான். அது எப்படி விலைமதிக்க முடியாத பொருட்களில் ஒன்று தந்தம். அதை முறித்து வியாசர் மகாபாரதம் சொல்ல கணபதி எழுதினார் என்று கதை சொல்லுகிறது.
ஒரு நாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதற்காக செலவு செய்கிறது. இவற்றின் செரிமானத் திறன் மிக மந்தமானது. உண்பதில் 40 விழுக்காடு மட்டுமே செரிமானம் ஆகிறது. எனவே அளவுக்கு அதிகப்படியான உணவை உட்கொள்ள வேண்டி இருக்கிறது. வளர்ந்த யானை ஒரு நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ எடையுள்ள உணவு உட்கொள்கிறது.
யானையின் துதிக்கை மிக விசேஷமானது. மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இந்த துதிக் கையினால் பெரும் மரக்கிளைகளை ஒடிக்கவும் உடைக்க முடியும். பெரும் சுமைகளையும் தனது துதிக்கையால் தூக்கி செல்கின்றன. உணவை எடுக்கவும் நீர் அருந்தவும் தனது துதிக்கையை பயன்படுத்திக் கொள்கிறது.
யானையின் தந்தங்களுக்கு யானைக் கோடு என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சி ஆகும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...