லிவர் நன்றாக இயங்க இதோ ஒரு அருமையான “
பிராண முத்திரை” எல்லோராலும் யோகாசனம் செய்ய முடியாது, வயதானவர்கள்,
உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் யோகமுத்ரா ஆசனம் செய்ய முடியாது. எனவே
கல்லீரல் நன்கு இயங்கும் பிராண முத்ராவை பயிற்சி செய்யுங்கள்.
பிராண முத்திரை செய்முறை
ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும், தரையில் அமர முடிந்தால்
தரையில் ஒரு விரிப்பு விரித்து சுகா சனத்தில் நிமிர்ந்து அமரவும். முது
கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக நடக்கும்
மூச்சில் கவனம் செலுத்தவும். பின் சுண்டு விரலையும், மோதிரவிரலையும்
மடித்து படத்தில் உள்ளதுபோல் வைத்து பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடங்கள்
காலை, மதியம், மாலை சாப்படுவதற்கு முன்பாக பயிற்சி செய்யவும்.
நமது கைவிரல்கள் உடலில் உள்ள பஞ்ச பூதத்தின் தன்மைகளை கட்டுப்
படுத்துகின்றது. சுண்டு விரல் நீர் மூலகம், மோதிர விரல் நிலமூலகம்,
பெருவிரல் நெருப்பு மூலகம். நீர் நிலம் இதனுடன் நெருப்பு மூலகம் இணையும்
பொழுது லிவருக்கு நல்ல பிராண சக்தியோட்டம் கிடைக்கிறது. அதில் உள்ள குறை
பாடுகள் நீங்குகின்றது.
இந்த முத்திரையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயிலலாம். இதற்காக
நீங்கள் செலவு செய்தது ஐந்து நிமிடம்தான். ஆனால் ஆயுள் முழுவதும்
ஆரோக்கியமாக வாழலாம். லிவரின் இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள்
சரியாக வெளியேறும். கண் நரம்புகள் நன்றாக இயங்கும்.
இன்று நாட்டில் நிறைய நபர்கள் டயாலிஸிஸ் எடுக்கின்றனர். முதலில் மாதம்
ஒருமுறை, பின் வாரம் இரு முறை டயாலிஸிஸ் எடுத்து மிகவும் அவதிபடுகின்றனர்.
வீட்டில் ஒருவருக்கு இந்தமாதிரி நோய் வந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களின்
மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலை வராமல் இருக்க தினமும் மேற் குறிப்பிட்ட பயிற்சிகளை பத்து நிமிடம் செய்து நலமாக, வளமாக வாழுங்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...