"விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான்.. நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்."
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு.. ஆதரவாக.. அவர்தம் சேவைகளை அங்கீகரித்து போற்றி வணங்கும் விதமாக.. இன்றைய தினம் பல கோடிக்கணக்கான வாழ்த்துக்களும், மீம்ஸ்களும், சிறு காணொளிகளும் வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்.. பகிரப்படுகின்றன..
நல்லதுதான்.. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு.. ஆதரவாக.. அவர்தம் சேவைகளை அங்கீகரித்து போற்றி வணங்கும் விதமாக.. இன்றைய தினம் பல கோடிக்கணக்கான வாழ்த்துக்களும், மீம்ஸ்களும், சிறு காணொளிகளும் வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்.. பகிரப்படுகின்றன..
இந்த இரண்டு நாட்கள் பெரும் ஆரவாரம் செய்து விட்டு.. அப்படியே மறந்து.. நம் அன்றாட நிகழ்வுகளில் மூழ்கி விடுவோம்..
இதனால் உழவர்களுக்கு என்ன பெரிய பயன்..??
நாட்டில்.. பல லட்சம் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்..
தற்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் "நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள்..?" என்ற கேள்வியை முன் வைத்தால்.. (பெரும்பான்மையான விவசாயிகளின் வாரிசுகள் கூட) பத்தாயிரத்தில் ஒருவர்கூட "தாங்கள் ஒரு விவசாயியாக விரும்புகிறேன்..!" என சொல்வதில்லை.
எனில்..
விவசாயத்தின் எதிர்காலம்..?
விவசாயம்.. மற்றும் விவசாயின் எதிர்காலம் மட்டும் கேள்விக்குறி ஆகவில்லை..!! நம்முடைய எதிர்காலமும் சேர்ந்து அல்லவா கேள்விக்குறியாகி நிற்கிறது..!?
மத்திய அரசு இதனை செய்ய வேண்டும்..! மாநில அரசு இதைச் செய்யவேண்டும்..! என பல நூறு தீர்வுகள்.., விமர்சனங்கள் நம்மிடம் இருக்கலாம்..
சரிதான்..
"நாம்" என்ன செய்யப்போகிறோம்..?!!
மிகக் குறைந்த பட்ச முயற்சியாக..
"நாம் அனைவரும்" இனிமேல் பன்னாட்டு குளிர்பானங்கள்.. காபி, தேனீர் ஆகியவற்றை இயன்றவரை தவிர்த்துவிட்டு.. இளநீர் பருக ஆரம்பிக்கலாமே..
வாகனங்களில் விரையும்பொழுது.. வழியில்.. கரும்புச்சாறு கடைகளைக் கண்டால்.. சற்று நிறுத்தி.. குடும்பத்துடன் பருகிச் செல்லலாமே..
சிறுதுளி பெருவெள்ளமாக.. விவசாயி, நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம்.. அனைத்தும் மேம்படும் தானே..??!!
(நினைத்துப் பாருங்கள் நம் நாட்டின் மக்கள் தொகையான 130 கோடி பேரில் 100 கோடி பேர் ஒரு நாளைக்கு ஒரு இளநீர் சாப்பிடுவதாக வைத்து கொண்டால்.. 100 கோடி * 20 = 2 000 கோடி... ஒவ்வொரு நாளும் 2000 கோடி ரூபாய்.)
நம்முடைய இந்த சிறு மாற்றம் .. எத்தனை லட்சம் விவசாயிகளுக்கு, அவர்களைச் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு, கிராம மக்களுக்கு.. பேருதவியாக அமையும்...?!!!
செய்வோமா..?
🙏🏻🙏🏻🙏🏻
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற ஆதங்கத்தில்..
ஆசிரியர் நவநீதன்..
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...