மருத்துவம் மற்றும் மோட்டார் வாகன காப்பீட்டில் மாறுதல்களைக் கொண்டுவர
காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி
வருகின்றன.தற்போது வாகனங்களுக்கு அதன் வயது, மாடல் ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்டு காப்பீடு ப்ரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது.
இதில் மாறுதல் கொண்டு வர வேண்டும், பயணம் செய்த தூரத்தை அடிப்படையாகக்
கொண்டு காப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள்
காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு வந்தது.
இதன் அடிப்படையில் இந்த புதிய ஆலோசனைகளை ஏற்பது தொடர்பாக குழு
அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு புதிய ஆலோசனைகளை வழங்கியது. இவற்றில் 37
ஆலோசனைகளை செயல்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளதாக
கூறப்படுகிறது.
இதில் வாகனத்தின் வயது அடிப்படையில் பாலிசி வழங்குவதற்கு பதில் பயண தூரத்தை
கணக்கிடுவது, மருத்துவக் காப்பீட்டில் வயது, பாலினம் உள்ளிட்டவற்றை
அடிப்படையாகக் கொள்வதுடன் சர்க்கரை நோய்,
ரத்தத்தில் கொழுப்பு படிவது உள்ளிட்டவை அடிப்படையில் பாலிசி வழங்குவது
உள்ளிட்ட திட்டங்கள் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தத்
திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சோதனை அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்,
இதற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் நடைமுறை செயல்பாட்டில் ஏற்படும்
சிக்கல் உள்ளிட்டவையைப் பொருத்து இந்த திட்டம் முழுவதும் அமல்படுத்தப்படும்
என்று கூறப்படுகிறது.
Switching to Health and Vehicle Insurance
The Insurance Regulatory and Development
Authority came up with a number of requests, including the need to make
a change and determine insurance based on the distance traveled. Based
on this, the committee was formed to adopt these new suggestions.
The group provided various new
suggestions. It is reported that the regulatory authority has decided to
implement 37 of these proposals.
The project is said to have been in
effect for six months on a trial basis, with the reception and the
complexity of the implementation being expected to be implemented
throughout the project.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...