பி.எட். படிப்பில் சேர
19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர்
ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் நேற்று
நிருபர்களிடம் கூறியதாவது:–
பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பி.எட். கல்லூரிகள்
21 உள்ளன. 649 சுயநிதி பி.எட்.
கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு
உதவி பெறும் 21 கல்லூரிகளில் 2 ஆயிரத்து400 பி.எட். இடங்கள்
உள்ளன. அந்த இடங்களுக்கு மட்டும்
ஒற்றைச் சாளற முறையில் கலந்தாய்வு
நடத்தி மாணவ–மாணவிகளை சேர்க்க
உள்ளோம். இந்த கலந்தாய்வு முதல்
முதலாக பல்கலைக்கழகம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.பி.எட். படிக்க
விரும்பும் மாணவ–மாணவிகள் ஆன்லைன்
மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
19–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக
தமிழ்நாடு முழுவதும் 29 மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 3 மையங்கள் ஏற்படுத்தி அவற்றில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம்ஆகிய
மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதுபோல தர்மபுரி, கிருஷ்ணகிரி
மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தர்மபுரியில் உள்ள மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள
மையத்தை நாடலாம்.இது பற்றிய
முழுவிவரமும் இணையதளத்தில் (www.onlinetn.com)
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 19–ந்தேதி
தான் செயல்படத் தொடங்கும். அன்று விவரங்களை அறிந்து
கொள்ளலாம். 28–ந்தேதி கடைசி நாள்
விண்ணப்பிக்க மாணவ–மாணவிகள் அந்த
மையங்களுக்கு செல்லும்போது, புகைப்படம் வைத்திருந்தால் கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால்
உங்களை அதிகாரிகளே புகைப்படம் எடுப்பார்கள்.விண்ணப்பிக்க அத்தனை உதவிகளையும் செய்வார்கள்.
தப்பாக விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு விண்ணப்பிக்க
ஏற்பாடு செய்துள்ளோம். எப்படி விண்ணப்பிப்பது என்பது
குறித்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த 29 பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு
முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு
ரசீது கொடுக்கப்படும்.
விண்ணப்பிக்க
28–ந்தேதி கடைசி நாள்.பல்கலைக்கழக
இணைய தள முகவரி www.tntue.in கலந்தாய்வு
28–ந்தேதிக்கு பிறகு 3 அல்லது 4 நாட்கள்
கழித்து ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.
பாடம் வாரியாக வெளியிடப்பட உள்ளது.
பின்னர் ரேங்க் மற்றும் கலந்தாய்வு
தேதி அனைத்து மாணவ–மாணவிகளுக்கும்
எஸ்.எம்.எஸ்.மூலம்
அனுப்பப்படும். செல்போன் மற்றும் பி.எஸ்.என்.எல். தரைவழி
(லேண்ட் லைன்) தொலைபேசி மூலமும்
பேசி தெரிவிக்கப்படும். எம்.எட். படிப்பில்
சேர விண்ணப்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு
துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
பேட்டியின் போது பல்கலைக்கழக பதிவாளர்
கலைச்செல்வன் உடன் இருந்தார்.