ஆசிரியர்
நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரிஇடைநிலை
ஆசிரியர்கள் - பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு கட்டபோராட்டங்களில்
ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை பள்ளி
கல்வித்துறை இயக்கக (டி.பி.ஐ.) வளாகத்தில் நேற்று இடைநிலை -பட்டதாரி
ஆசிரியர்கள் நெற்றியில் நாமம் இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆசிரியர்
நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்,
தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட
வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பியபடியும்
டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தபோராட்டம்
குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில்
ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட
60பெண்கள் உள்பட 250 ஆசிரியர்களையும் நுங்கம்பாக்கம் போலீசார் கைது
செய்துஅருகில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில்
அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.