இதையடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. மேலும் இறந்த ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்றோருக்கு, அவர்கள் செலுத்திய சந்தா தொகை, வட்டி, இதர பணப்பலன்களை வழங்க அரசு உத்தரவிட்டது.ஆனால் பாதிக்கப்பட்டோர் அனுப்பிய விண்ணப்பங்களை ஏதாவது ஒரு காரணம் கூறி கருவூல கணக்குத்துறை திருப்பிஅனுப்பி வருகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.புதிய பென்ஷன் திட்ட போராட்ட ஒருங்கிணைப்பாளர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: விண்ணப்பங்களை அரசின் புள்ளி விபர தொகுதி மையத்திற்கு அனுப்பினால் போதும். அங்கிருந்து கருவூல கணக்குத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒரே மாதத்தில் பணப்பலன் கிடைக்கும் என, அரசு தெரிவித்தது. தற்போது விண்ணப்பங்களை ஏதாவதொரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரித்து வருகிறது.மேலும் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒரு மாதத்தில் பணப்பலன் தர முடியாது. சீனியாரிட்டி படி தான் தரமுடியும் எனவும் கூறியுள்ளது, என்றார்.
இதையடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. மேலும் இறந்த ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்றோருக்கு, அவர்கள் செலுத்திய சந்தா தொகை, வட்டி, இதர பணப்பலன்களை வழங்க அரசு உத்தரவிட்டது.ஆனால் பாதிக்கப்பட்டோர் அனுப்பிய விண்ணப்பங்களை ஏதாவது ஒரு காரணம் கூறி கருவூல கணக்குத்துறை திருப்பிஅனுப்பி வருகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.புதிய பென்ஷன் திட்ட போராட்ட ஒருங்கிணைப்பாளர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: விண்ணப்பங்களை அரசின் புள்ளி விபர தொகுதி மையத்திற்கு அனுப்பினால் போதும். அங்கிருந்து கருவூல கணக்குத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒரே மாதத்தில் பணப்பலன் கிடைக்கும் என, அரசு தெரிவித்தது. தற்போது விண்ணப்பங்களை ஏதாவதொரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரித்து வருகிறது.மேலும் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒரு மாதத்தில் பணப்பலன் தர முடியாது. சீனியாரிட்டி படி தான் தரமுடியும் எனவும் கூறியுள்ளது, என்றார்.








