07.01.1610: கலிலியோ வியாழனில் துணைக் கோள்களை கண்டறிந்த தினம்!
இத்தாலியைச் சேர்ந்த கலிலியோ கலிலி இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் அறிஞர், மற்றும் தத்துவ ஞானி என்று பல பரிமாணங்களைக் கொண்டவர் .
இவர் அன்றைய அறிவியலில் பல புரட்சிகளைச் செய்து, நவீன அறிவியலுக்கு அடிகோலினார். இதனால் நவீன அறிவியலின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை, என்று பலவாறாகப் பாராட்டப்படுகிறார்.
தொலைநோக்கியை திருத்தி அமைத்தது, மேம்படுத்தப்பட்ட அடிப்படைத் தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு பரிமாணங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை கண்டுபிடித்தல், மற்றும் கதிரவனில் காணப்படும் கரும்புள்ளியை ஆராய்தல் ஆகியவை வானியலுக்கு இவரளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும்.இத்தாலியைச் சேர்ந்த கலிலியோ கலிலி இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் அறிஞர், மற்றும் தத்துவ ஞானி என்று பல பரிமாணங்களைக் கொண்டவர் .
இவர் அன்றைய அறிவியலில் பல புரட்சிகளைச் செய்து, நவீன அறிவியலுக்கு அடிகோலினார். இதனால் நவீன அறிவியலின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை, என்று பலவாறாகப் பாராட்டப்படுகிறார்.
1610ஆம் ஆண்டு தே நாளன்று, கலிலியோ வியாழனுக்கு அருகில் மூன்று நட்சத்திரங்களை கண்டார். அதற்கடுத்த இரவுகளில் இந்த "நட்சத்திரங்கள்" வியாழனுக்கு ஒப்பிடும்போது நகர்கின்றன என்பதை கவனித்தார்.
ஆதலால் அவைகள் நிலையான நட்சத்திரங்கள் அல்ல என்று கண்டறிந்தார். 10 ஜனவரியில் அவற்றில் ஒன்று மறைந்து விட்டதை அவர் கண்டார். அது வியாழனின் பின் மறைந்திருக்கவேண்டும் என்று அவர் எண்ணினார்.
ஆதலால் அம்மூன்றும் வியாழனின் நிலாக்களாக இருக்கவேண்டும் என்பதை அவர் கண்டார். அவர் ஜனவரி 13ம் தேதி நான்காவது வியாழனின் நிலாவை கண்டறிந்தார். பிறகு வானவியலாளர்கள் இந்நான்கு நிலைகளையும் கலிலியன் நிலாக்கள் என்று அவர் பெருமையில் பெயரிட்டனர்.
இந்த நிலாக்கள் தற்போது ஐயோ, ஐரோப்பா, கேனிமெட் மற்றும் கால்லிச்டோ என்று அழைக்கப்படுகின்றன