Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TET ARTICLE DR.RAMADASS:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சி
பெற்ற 30,000 பேர் இருப்பதால் ஆசிரியர் தகுதித்
தேர்வு இப்போதைக்கு
நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அரசு பள்ளிகளில்
காலியாக உள்ள
இடங்கள் ஏற்கனவே
தகுதித் தேர்வில்
தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும்
அவர் கூறியுள்ளார்.
இது கல்வி
உரிமைச் சட்டத்திற்கு
எதிரானதாகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்கள்
அதிக எண்ணிக்கையில்
இருப்பதால் புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வு
நடத்த தேவையில்லை
என்பது கல்வி
உரிமைச் சட்டத்தின்
அடிப்படையை புரிந்து கொள்ளாமல் தெரிவிக்கப்பட்ட கருத்து
ஆகும். ஆசிரியர்
தகுதித் தேர்வு
என்பது தனியார்
நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது போன்று,
பணியிடங்கள் காலியாக இருந்தால் மட்டும்
மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்ல.
மாறாக, காலியிடங்களின்
எண்ணிக்கையை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட
இடைவெளிக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டிய
தகுதி வழங்கும்
நடவடிக்கை ஆகும்.
கல்வி பெறும்
உரிமைச் சட்டத்தின்படி
தகுதித் தேர்வு
நடத்துவது குறித்து
15.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த
181&ஆவது அரசாணையின் பிறசேர்க்கை 11 ஆவது பிரிவில்,‘‘
ஆண்டுக்கு குறைந்தபட்சம்
ஒருமுறையாவது தகுதித் தேர்வை அரசு நடத்த
வேண்டும். இதில்
தேர்ச்சி பெற்றதற்கான
சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளுக்கு மிகாமல்
அரசு நிர்ணயித்துக்
கொள்ளலாம். அத்துடன் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை
உயர்த்திக் கொள்வதற்காக மீண்டும் மீண்டும் தேர்வை
எழுதலாம்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்பிரிவை அமைச்சர்
படித்து தெரிந்து
கொள்ள வேண்டும்.
இந்த விதிகளின்படி மத்திய
அரசால் நடத்தப்படும்
மத்திய ஆசிரியர்
தகுதித் தேர்வு
ஆண்டுக்கு ஒருமுறை
ஜூன் மாதத்தில்
நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் எத்தனை பேர்
தேர்ச்சி பெற்றாலும்,
அதைக் கருத்தில்
கொள்ளாமல் ஆண்டு
தோறும் தகுதித்
தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
கல்லூரி மற்றும்
பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான மாநில அளவிலான
தகுதித் தேர்வு(ஷிணிஜி) ஆண்டுக்கு ஒருமுறையும்,
தேசிய தகுதித்
தேர்வு(ழிணிஜி)
ஆண்டுக்கு இருமுறையும்
நடத்தப்படுகின்றன. இவற்றில் வெற்றி
பெறுவது ஆசிரியர்
பணிக்கான தகுதி
தானே தவிர,
உத்தரவாதமல்ல. இதனால் தகுதித் தேர்வில் வெற்றி
பெற்றவர்களில் 30,000 பேருக்கு இதுவரை
வேலை கிடைக்கவில்லை
என்று கூறி தகுதித்
தேர்வு நடத்தப்படாது
என்பது அறியாமையின்
உச்சத்தில் அமைச்சர் இருப்பதையே காட்டுகிறது.
அமைச்சரின் இந்த அறிவிப்பால்
இரு வகையான
பாதிப்புகள் ஏற்படும். தமிழகத்தில் கடந்த 2013&ஆம்
ஆண்டு தான்
கடைசியாக தகுதித்
தேர்வு நடத்தப்பட்டது.
அதன்பின் 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களின்
சான்றிதழ் இன்னும்
3 ஆண்டுகளில் காலாவதியாகியாகிடும். அதற்குள் தகுதித்
தேர்வில் தேர்ச்சி
பெற்ற 30 ஆயிரம்
பேருக்கும் அரசு வேலை வழங்க முடியாது.
அதனால் அடுத்த
மூன்றாண்டுகளுக்குள் அவர்கள் மீண்டும்
தகுதித் தேர்வு
எழுதி தேர்ச்சி
பெற வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை
இத்தேர்வு நடத்தப்பட்டால்
விருப்பப்பட்ட நேரத்தில் அவர்கள் மீண்டும் தேர்வு
எழுதி தங்களின்
தகுதியை புதுப்பித்துக்
கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை
பொறுத்து 60% வரை தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படுவதால்,
ஒருமுறை குறைந்த
மதிப்பெண் எடுத்திருந்தால்
அவர் அடுத்த
ஆண்டே மீண்டும்
தேர்வெழுதி அவரது தகுதியை உயர்த்திக் கொள்ள
முடியும். ஆனால்,
அமைச்சரின் அறிவிப்பால் இந்த இரு வாய்ப்புக்களும்
பறிக்கப்படுகின்றன.
இதற்கெல்லாம் மேலாக ஆசிரியர்
படிப்புக்கு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதி
தேர்ச்சி பெற்றால்
தான் ஆசிரியர்
பணிக்கு தகுதி
பெறுவர். கடந்த
4 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படாததால், அந்த காலத்தில் ஆசிரியர் படிப்பு
முடித்தவர்கள் அந்த பணிக்கு தகுதி பெற
முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால், அவர்கள்
படித்த படிப்பு
பயனற்றதாகிவிட்டது. ஆசிரியர் பணிக்கு
தகுதி பெற
விரும்புவோருக்கு தகுதித் தேர்வு நடத்த வேண்டியது
அரசின் கடமை.
ஆனால், அந்தக்
கடமையை செய்யாததன்
மூலம் 4 ஆண்டுகளில்
25 லட்சம் பேர்
ஆசிரியர் ஆவதற்கு
தகுதி பெறும்
உரிமையை தமிழக
அரசு மறுத்திருக்கிறது.
அத்துடன் தகுதித்
தேர்வு நடத்த
வேண்டிய கடமையும்,
பொறுப்பும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு
உள்ளது. ஆனால்,
தகுதித் தேர்வு
நடத்தப்படாது என்று கூறியதன் மூலம்
ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அதன் கடமையை
செய்யவிடாமல் தடுத்திருக்கிறார். இது கல்வி பெறும்
உரிமைச் சட்டத்தை
மீறிய செயல்
என்பதை பள்ளிக்கல்வி
அமைச்சர் உணரவேண்டும்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்ற 30,000 பேர் இன்னும் வேலை பெறாமல்
இருக்கின்றனர் என்பதே அரசின் தோல்வியைக் காட்டுகிறது.
ஆசிரியர் தகுதித்
தேர்வு என்பது
அரசு மற்றும்
அரசு உதவி
பெறும் பள்ளிகளுக்கு
மட்டுமானது அல்ல. சிறுபான்மை பள்ளிகள் தவிர
மற்ற தனியார்
சுயநிதி பள்ளி
ஆசிரியர்களுக்கும் இந்த தகுதித்
தேர்வு பொருந்தும்.
2011 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்த
181&ஆவது அரசாணையின் மூன்றாவது பிரிவில்,‘‘அரசு
உதவி பெறாத
தனியார் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில்
தகுதித் தேர்வில் தேச்சி பெற வேண்டும்
( The teachers working in unaided
private schools are required to pass Teacher Eligibility Test within 5 years)’’
என கூறப்பட்டிருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில்
தனியார் பள்ளிகளில்
பல லட்சம் ஆசிரியர்கள்
பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தகுதித்
தேர்வின் அடிப்படையில்
பணி அமர்த்தப்பட்டிருந்தால்,
இந்த 30,000 பேருக்கும் எப்போதோ வேலை கிடைத்திருந்திருக்கும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுகள்
கூடாது. வேலைவாய்ப்பக
பதிவு மூப்பு
அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்
என்பது தான்
பா.ம.க.வின் நிலைப்பாடும், விருப்பமும்
ஆகும். ஆனால்,
தகுதித் தேர்வு
கட்டாயம் என
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த
விதிகள் முழுமையாக
கடைபிடிக்க வேண்டும் என்று பா.ம.க. கருதுகிறது.
எனவே, ஆண்டுக்கு
ஒருமுறை தகுதித்தேர்வு
நடத்தி, அதில்
தேர்ச்சி பெறுவோரைக்
கொண்டு ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் இவ்வாறு
கூறியுள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








