10ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்டம்தோறும் 100% எடுத்த பள்ளிகள்
பிளஸ் 2 தேர்ச்சியை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்
தேர்விலும், விருதுநகர் மாவட்டம், தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்
பிடித்துள்ளது. கன்னியாகுமரி, 98.17 சதவீதத்துடன், இரண்டாம் இடமும், 98.16
சதவீதத்துடன், ராமநாதபுரம் மூன்றாம் இடமும் பெற்றுள்ளன.


கடலுார் மாவட்டம், 88.74 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.
ஆண்டுதோறும், கடலுார், விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை போன்ற
மாவட்டங்கள், தேர்ச்சி சதவீதத்தில் தொடர்ந்து பின்னோக்கி செல்கின்றன. இந்த
மாவட்டங்களில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை
தொடர்வதால், மற்ற மாவட்டங்களுடன் போட்டி போட முடியாத நிலை உள்ளது.







