
தமிழகத்தில் 9,500-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 6,500 பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. எஞ்சியுள்ள சுமார் 3,000 பள்ளிகளுக்கு நிகழ் கல்வி ஆண்டுக்கு (2018-19) இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த நிலையில், கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்குத் தேவையான விவரங்களை உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு தனியார் கல்விக் கட்டண நிர்ணயக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.