2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தோருக்கும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அளிக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் அளிக்க வேண்டும் என்பன உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு ஊசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
அரசு பேச்சுவார்த்தை: ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக, அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அரசு சார்பிலும், ஜாக்டோ-ஜியோ சார்பில் அதன் நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்தே, டிசம்பர் 4 முதல் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுமா அல்லது திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமா என்பது தெரிய வரும்








