அமெரிக்காவில் மான்செஸ்டர் அம்ஹெர்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடைகளில் மின் சக்தியைச் சேமிக்கும் நவீன முறையின் உதவியுடன் ஸ்மார்ட் உடைகளை வடிவமைப்பது பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டர்.
இது போன்ற ஸ்மார்ட் உடைகளை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது என்றாலும், பயோ சென்சார்களை இயக்க பேட்டரியைப் புகுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பேட்டரியின் எடை காரணமாக அதனை அணிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையை முறியடிக்கும் விதமாக அவர்களது ஆராய்ச்சி அமைகிறது.








