" 24 . 03 . 2020 அன்று தமிழ்நாடு முழுவதும் + 2 பொதுத்தேர்வு நடைபெற்றது .
அத்தேர்வில் சில மாணவர்கள் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் ,
தங்களால் தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு
கொண்டு வந்ததை கனிவோடு பரிசீலித்து , 24 . 03 . 2020 அன்று + 2 தேர்வு எழுத
முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும் ,
இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன் ”
மேற்குறிப்பிட்ட மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து ,
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் / மாவட்டக் கல்வி
அலுவலர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .
1 . 24 . 03 . 2020 அன்று தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் வேதியியல் ,
கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு நடத்தப்பட்ட + 2
தேர்வுகளை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் எழுத முடியாத
மாணவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும் .
இத்தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் , அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால்
பின்னர் அறிவிக்கப்படும் .
2 . அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு , மேற்குறிப்பிட்ட விவரத்தினை , தங்களது பள்ளிகளில் 24 . 03 . 2020 அன்று நடைபெற்ற + 2 தேர்வுகளை எழுத முடியாத சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும் .
2 . அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு , மேற்குறிப்பிட்ட விவரத்தினை , தங்களது பள்ளிகளில் 24 . 03 . 2020 அன்று நடைபெற்ற + 2 தேர்வுகளை எழுத முடியாத சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும் .