வார்டு வரையறை பணிகள் முடிந்தவுடன் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வார்டு வரையறை பணிகள் முடிவடைந்து விட்டதால் 9 மாவட்டங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது. அதை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதையொட்டி 9 மாவட்டங்களில் புதிதாக உருவான 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரியாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.








