டோர் டெலிவரி:
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மக்கள் பீதியில் உள்ளதால் அரசு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சமூக விலகலை மேற்கொள்ளும்படி இந்தியா அரசு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்து வருகின்றனர்.
நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் நாளை அரிசி அட்டைக்காரர்களுக்கு வீட்டில் சென்று 1000 ரூபாய் மற்றும் இலவச பொருட்களுக்கான டோக்கன் தரப்பட உள்ளது. எனவே கடைகள் இயங்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.








