தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி,
தமிழகத்தில் இன்று 2,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி
செய்யப்பட்டவர்களின்மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 18 ஆயிரத்து 786 ஆக
அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 32,307 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ்
பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 3,188 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில்
இருந்துகுணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 53 ஆயிரத்து 061 ஆக
உயர்ந்துள்ளது.
ஆனாலும்
வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்
தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து418 ஆக
அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.













