பிளஸ் 2: இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள்:
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதையடுத்து, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,048 ஆக
அதிகரித்துள்ளது.
பள்ளிகளின் மூலம் 8.01 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக
சுமார் 50 ஆயிரம் பேரும் என மொத்தமாக 8.51 லட்சம் பேர் பிளஸ் 2
பொதுத்தேர்வை எழுதுகின்றனர். கடந்த ஆண்டைவிட சுமார் 30 ஆயிரம் பேர் இந்த
ஆண்டு கூடுதலாக பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2
பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு
1,974 தேர்வு மையங்களில் 8.22 லட்சம் பேர் எழுதினர்.
இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகத் தேர்வு
எழுதுவதையொட்டி, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக
அரசுத் தேர்வுகள் துறை பரிசீலித்தது. பரிசீலனைக்குப் பிறகு கூடுதலாக 70
தேர்வு மையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய தேர்வு
மையங்களுக்கு அனுமதி வழங்கும்போது அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம்
வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்குகிறது. மாநிலம்
முழுவதும் இந்த ஆண்டு 2,500 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற
உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுத்தேர்வு எழுத உள்ளவர்களில்
4 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...