தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி:பொது தேர்வில் தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம்- தினமலர்
அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி
இயக்ககத்தின் சார்பில், பிப்ரவரி மாதத்தில், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து,
பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதனால், நடப்பு கல்வியாண்டில், அரசு
பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில்,
முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்ககமும்;
ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி
இயக்ககமும்; கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதியுதவியுடன்
செயல்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ், ஆண்டுக்கு, 15 நாள் வரை,
அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும்.மத்திய அரசின் நிதி
ஒதுக்கீட்டை எதிர்பார்த்து இருந்ததால், நடப்பு கல்வியாண்டு நிறைவடையும்
தருணத்தில், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு
உள்ளது.மாணவர்களின் விவரங்களை, "ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்யும் பணிகளில் தலைமை ஆசிரியர் மற்றும்
ஒன்றிரண்டு ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைவருக்கும்
கல்வி இயக்ககத்தின் சார்பில், பிப்., 4 முதல்,
6ம் தேதி வரை, இயலாக் குழந்தைகளுக்கான கல்வி முறை குறித்த பயிற்சியும்;
பிப்., 4 முதல்,
7ம் தேதி வரை, கணிதப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக்
கல்வி இயக்ககத்தின் மூலம்,பாடவாரியாக,பிப்., 4ம் தேதியில் இருந்து, 22ம்
தேதி வரை, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு
பயிற்சிக்கும், பள்ளியிலிருந்தும் குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களாவது
பங்கேற்க வேண்டியுள்ளது.எனவே, பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை உருவாகி,
தேர்வு நேரத்தில் மாணவர்கள் தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் சரியவும் வாய்ப்பிருப்பதாக,
ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
கூறியதாவது:கல்வியாண்டின் இறுதியில்,
பாடம் நடத்துவது குறித்து பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் எந்த அளவுக்கு
பயன் பெறுவர் என்பது தெரியவில்லை.தேர்வுக்கு மாணவனை தயார்படுத்த வேண்டிய
நிலையில், ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுவதால்,பள்ளிகளில் ஒன்றிரண்டு
ஆசிரியர் இருப்பதே, அரிதாக உள்ளது. நடப்பாண்டில், மாணவர்களின் விவரங்களை
"ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்யும் பணியும் சேர்ந்து கொண்டதால், அனைத்து
பள்ளிகளிலும் இதே நிலை நீடிக்கிறது.சமச்சீர் கல்வியில், ஒன்பது மற்றும்,
10ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறை தேர்வு உள்ளதால், செய்முறை பயிற்சி
எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு
கல்வியாண்டில், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்படும் அபாயம்
உருவாகியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...